இந்தியா
3-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: மாலை 5 மணி நிலவரப்படி 60.19 சதவீத வாக்குகள் பதிவு
- அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.
- உள்துறை அமைச்சர் அமித்ஷா அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனிய பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இந்நிலையில், இன்று மாலை 6 மணியோடு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 60.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
மாநில வாரியாக விவரங்கள்:
அசாம்: 74.86 சதவீதம்
பீகார்: 56.01 சதவீதம்
சத்தீஸ்கர்: 66.87 சதவீதம்
கோவா: 72.52 சதவீதம்
குஜராத்: 55.22 சதவீதம்
கர்நாடகா: 66.05 சதவீதம்
மத்தியப் பிரதேசம்: 62.28 சதவீதம்
மகாராஷ்டிரா: 53.40 சதவீதம்
உத்தரப் பிரதேசம்: 55.13 சதவீதம்
மேற்கு வங்காளம்: 73.93 சதவீதம்