இந்தியா

மாநகராட்சி தேர்தலில் முறைகேடு: உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

Published On 2026-01-15 14:30 IST   |   Update On 2026-01-15 14:30:00 IST
  • மும்பையின் 227 வார்டுகளில் 1,700 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
  • 1.03 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் மும்பை, புனே உட்பட 29 மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மொத்தம் 2,869 இடங்களுக்கு 15,931 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மும்பையின் 227 வார்டுகளில் 1,700 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு மட்டும் 1.03 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காலை 7.30 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5.30 மணிக்கு நிறைவடையும். தேர்தலை முன்னிட்டு சம்பந்தப்பட்ட மாநகராட்சிப் பகுதிகளில் இன்று பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிமுதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் தாக்கரே சகோதரர்களுக்கும், பாஜக-சிவசேனா கூட்டணிக்கும் இடையே பெரும் போட்டி நிலவுகிறது.

இதனிடையே மாநகராட்சி தேர்தலில் முறைகேடு நடப்பதாக சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார. மேலும், இது ஜனநாயகத்தை கொலை செய்வதற்கான முயற்சி என கடுமையாக சாடியுள்ளார்.

Tags:    

Similar News