செய்திகள்

தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி

Published On 2018-04-20 08:40 GMT   |   Update On 2018-04-20 08:40 GMT
தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட் இன்று அனுமதி அளித்துள்ளது. #TN #CooperativeSocietiesElection #SC
புதுடெல்லி:

தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, தேர்தல் பணிகளை நிறுத்திவைக்கவும், 3, 4 மற்றும் 5-வது கட்ட தேர்தல்களை நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  தேர்தல் நடவடிக்கைகளில் ஐகோர்ட் தலையிட்டு தடைவிதிக்க முடியாது என்று கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. தமிழக அரசு சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இதற்கிடையே, கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட் இன்று அனுமதி அளித்துள்ளது. ஆனால் கூட்டுறவு சங்க தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. தேர்தலை நடத்திவிட்டு மே 3-ம் தேதி கோர்ட்டுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. #TN #CooperativeSocietiesElection #SC #Tamilnews
Tags:    

Similar News