search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டுறவு சங்க தேர்தல்"

    • புதிதாக உறுப்பினர்களை சேர்க்க மே மாதம் 15-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.
    • ஏற்கனவே உறுப்பினராக உள்ள நபர்களின் ஆதார் எண், குடும்ப அட்டை விவரங்களை 15.6.2023-க்குள் சேகரிக்க வேண்டும்.

    சென்னை:

    கூட்டுறவு சங்கங்களின் தேர்தல்களை சுதந்திரமாகவும் நியாயமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற வாக்காளர் பட்டியல் சரிவர தயாரிக்கப்பட வேண்டி உள்ளது.

    அதற்கான கூட்டுறவு சங்கங்களின் விதிகளில் விதி மற்றும் உறுப்பினர் சேர்க்கை படிவம் 3 முக்கியமான திருத்தங்களை மேற்கொண்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

    அதன்படி கூட்டுறவு சங்க பதிவாளரின் சுற்றறிக்கையில் உறுப்பினர் பட்டியல் தயார் செய்யவும் அதற்கான காலமும் குறிப்பிடப்பட்டு உள்ளன.

    15.3.2023 உள்ள உறுப்பினர் பட்டியல் வெளியிடுதல், வருகிற 14-ந்தேதி கால வரையறை முடிவுறுகிறது.

    புதிதாக உறுப்பினர்களை சேர்க்க மே மாதம் 15-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே உறுப்பினராக உள்ள நபர்களின் ஆதார் எண், குடும்ப அட்டை விவரங்களை 15.6.2023-க்குள் சேகரிக்க வேண்டும். இறந்த உறுப்பினர்களின் பட்டியலை 15.7.23-க்குள் தயாரிக்க வேண்டும். தகுதியற்ற உறுப்பினர்களின் பட்டியலை 31.7.2023-க்குள் தயாரிக்க வேண்டும். தகுதியான உறுப்பினர் பட்டியலை 16.8.2023-க்குள் வெளியிட வேண்டும்.

    தகுதியான உறுப்பினர்கள் பட்டியல்கள் மீதான ஆட்சேபனை கோரிக்கை பெற 23.8.2023 வரை 7 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். ஆட்சேபனை, கோரிக்கைகள் தொடர்பாக 31.8.2023-க்குள் பதில் பெறுதல் வேண்டும். ஆட்சேபனைக்கு 15.9.2023-க்குள் பதில் அளிக்க வேண்டும். உறுப்பினர்கள் இறுதி பட்டியல் ஒப்புதலுக்கு 30 நாட்கள் 15.10.2023 வரை அவகாசம் வழங்குதல், பொதுப்பேரவை கூட்டம் நடத்தப்பட்டு தகுதியான உறுப்பினர்கள் இறுதி பட்டியல் 31.10.2023 அன்று வெளியிடப்பட வேண்டும் என்று பதிவாளர் அறிக்கை தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • ஒரு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வு செய்து, சங்க நிர்வாகத்தை மேற்கொள்வர்.
    • தேர்தல் பணிகள் துறை வாரியாக துவங்கி, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர்கள், துணை பதிவாளர்கள் மட்டத்தில் இரு கட்ட ஆலோசனை நடத்தி தேர்தல் பணிகள் குறித்து உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

    இது குறித்து கூட்டுறவு அதிகாரிகள் கூறியதாவது:-  தமிழகத்தில் உள்ள 23 ஆயிரத்து 149 கூட்டுறவு சங்கங்களுக்கு தலா 11 இயக்குனர்கள் கொண்ட நிர்வாக குழு, உரிய சங்கங்களின் ஓட்டுரிமை பெற்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவர்.

    அவர்களில் ஒரு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வு செய்து, சங்க நிர்வாகத்தை மேற்கொள்வர். அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் பணிகள் துறை வாரியாக துவங்கி, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

    இதுதவிர, தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு காரணங்களுக்காக தேர்தல் ரத்து செய்யப்பட்ட சங்கம், முறைகேடு புகார்களால் கலைக்கப்பட்ட சங்கம் உள்ளிட்ட விவரங்கள் பெறும் பணி நடந்து வருகிறது. இம்முறை வருவாய் கோட்ட அளவில் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

    தமிழகத்தில் உள்ள திருப்பூர் உள்பட 38 மாவட்டங்களில் 94 வருவாய் கோட்டங்களுக்கு தலா ஒரு தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்படுகின்றனர்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • கூட்டுறவு சங்கங்களின் விதிகளை திருத்தாமல் சங்க நிர்வாகிகளின் பதவி காலத்தை 5 ஆண்டாக வைத்து தேர்தல் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
    • கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் சென்னை மண்டல கூடுதல் பதிவாளருக்கும் அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் உறுப்பினர்கள் பதவியில் உள்ளனர்.

    இவர்களின் பதவி காலத்தை 5 ஆண்டில் இருந்து 3 ஆண்டாக குறைத்து தமிழக சட்டசபையில் கடந்த ஜனவரி மாதம் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.

    இந்த நிலையில் கூட்டுறவு சங்கங்களின் விதிகளை திருத்தாமல் சங்க நிர்வாகிகளின் பதவி காலத்தை 5 ஆண்டாக வைத்து தேர்தல் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் சென்னை மண்டல கூடுதல் பதிவாளருக்கும் அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் 2018 ஓட்டு மொத்த தேர்தல் முதற்கட்டத்தில் 18,468 தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்கள் 12.3.2018 முதல் 11.8.2018 வரை நடைபெற்றன என்றும், அவற்றில் முதல் நிலையில் 3.4.2018 அன்று தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு 2.4.2023 அன்று 5 ஆண்டு பதவிக்காலம் முடிவடைய உள்ள 4,684 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்களை தற்போது தேர்தல் ஆணையம் நடத்த உத்தேசித்துள்ளது என்றும் கூறப்பட்டு உள்ளது.

    எனவே பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் மேலே குறிப்பிட்டவாறு 5 ஆண்டு முடிவுறும் கூட்டுறவு சங்கங்கள், இவற்றுடன் சேர்த்து இதர வகையில் உள்ள ஏப்ரல் 2023-ல் தேர்தல் நடத்தக்கூடிய கூட்டுறவு சங்கங்கள் விவரங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

    எனவே மேற்படி விவரங்களை தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப ஏதுவாக 5 ஆண்டு முடிவுறும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் இதனுடன் சேர்த்து புதியதாக பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் மற்றும் இதர வகையில் ஏப்ரல் 2023-ல் தேர்தல் நடத்தக்கூடிய கூட்டுறவு சங்கங்களின் விவரங்களை சரகம் வாரியாக படிவத்தில் பூர்த்தி செய்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க ஏதுவாக இந்த அலுவலகத்திற்கு 28.12. 2022-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×