search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "co operative societies election"

    • ஒரு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வு செய்து, சங்க நிர்வாகத்தை மேற்கொள்வர்.
    • தேர்தல் பணிகள் துறை வாரியாக துவங்கி, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர்கள், துணை பதிவாளர்கள் மட்டத்தில் இரு கட்ட ஆலோசனை நடத்தி தேர்தல் பணிகள் குறித்து உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

    இது குறித்து கூட்டுறவு அதிகாரிகள் கூறியதாவது:-  தமிழகத்தில் உள்ள 23 ஆயிரத்து 149 கூட்டுறவு சங்கங்களுக்கு தலா 11 இயக்குனர்கள் கொண்ட நிர்வாக குழு, உரிய சங்கங்களின் ஓட்டுரிமை பெற்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவர்.

    அவர்களில் ஒரு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வு செய்து, சங்க நிர்வாகத்தை மேற்கொள்வர். அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் பணிகள் துறை வாரியாக துவங்கி, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

    இதுதவிர, தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு காரணங்களுக்காக தேர்தல் ரத்து செய்யப்பட்ட சங்கம், முறைகேடு புகார்களால் கலைக்கப்பட்ட சங்கம் உள்ளிட்ட விவரங்கள் பெறும் பணி நடந்து வருகிறது. இம்முறை வருவாய் கோட்ட அளவில் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

    தமிழகத்தில் உள்ள திருப்பூர் உள்பட 38 மாவட்டங்களில் 94 வருவாய் கோட்டங்களுக்கு தலா ஒரு தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்படுகின்றனர்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். 

    மேலப்பாளையத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் கண்ணாடி ஜன்னல்களையும் கல்லால் உடைத்துவிட்டு கும்பல் தப்பியோடி விட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. மேலப்பாளையம் நகர கூட்டுறவு சங்கத்திற்கு நிர்வாகிகளை தேர்வு செய்ய ஏற்கனவே வேட்புமனு தாக்கல் நடந்தது. அப்போது மேலப்பாளையத்தில் கலவரம் ஏற்படும் சூழ்நிலை இருந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட மேலப்பாளையம் நகர கூட்டுறவு வங்கி தேர்தல் நடத்த அனுமதிக்கப்பட்டது. இதில் ஒரு பிரிவினர் மனு தாக்கல் உள்ளிட்ட அனைத்தும் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    மற்றொரு தரப்பினர் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்த படியே தேர்தலை நடத்த வேண்டும் என கூறினர். இந்நிலையில் இன்று காலை கூட்டுறவு சங்க அதிகாரிகள் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அப்போது திடீரென ஒரு கும்பல் உள்ளே நுழைந்து மேஜை, நாற்காலிகள், விளக்குகளை உடைத்தனர். மேலும் கண்ணாடி ஜன்னல்களையும் கல்லால் உடைத்துவிட்டு தப்பியோடி விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    உடனடியாக சம்பவ இடத்திறகு மேலப்பாளையம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையொட்டி மேலப்பாளையம் நகர கூட்டுறவு சங்க தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் கல்லூர் வேலாயுதம், அவைத்தலைவர் ஜெகநாதன் என்ற கணேசன், துணை செயலாளர் எம்.சி.ராஜன், பகுதி செயலாளர்கள் ஹைதர்அலி, அசன்ஜாபர்அலி மற்றும் நிர்வாகிகள் வேண்டுமென்றே ஆளுங்கட்சியினர் பொருட்களை உடைத்துவிட்டு தேர்தலை ஒத்திவைத்துவிட்டனர். உடனடியாக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என கூறினர்.

    இதைதொடர்ந்து அ.தி.மு.க.பகுதி செயலாளர்கள் ஹயாத், கிருஷ்ணமூர்த்தி, வக்கீல் ஜெனி உள்ளிட்ட நிர்வாகிகள் அங்கு வந்து அ.ம.மு.க.வினர் வேண்டுமென்றே கலவரம் செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். இருதரப்பினரும் புகார் கொடுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


    இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலப்பாளையத்தில் உள்ள மற்ற கூட்டுறவு சங்கங்களுக்கும், பாளையில் உள்ள கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட நெல்லை மாவட்டத்தில் உள்ள 32 கூட்டுறவு சங்கத்திற்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    தேர்தல்களை அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகள் பார்வையிட்டு வருகின்றனர். இன்று மாலை தேர்தல் முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 

    கூட்டுறவுச் சங்கங்களுக்கான தலைவர், துணைத்தலைவர் தேர்தல் வருகிற 11-ந்தேதி நடத்தப்படும் என்று தமிழக கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #CooperativeSocietiesElection

    சென்னை:

    தமிழக கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கூட்டுறவு தேர்தலின் 5 ஆண்டு பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது.தொடக்கச் சங்கங்கள், மத்திய சங்கங்கள் 5 கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம் வகுத்தது.

    முதல் அடுக்கில் வரும் 18,465 தொடக்கக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு முதல்கட்டத்தில் 12.03.2018 முதல் 7.05.2018 வரை 4 நிலைகளாக தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின் அடிப்படையில் 4 நிலைகளிலும் தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

    இந்தநிலையில் அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் உள்ளது உள்ளபடியே நிறுத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் 9.04.2018 நாளிட்ட ஆணைக்கிணங்க அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன.

    இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்ததின் பேரில் உச்ச நீதிமன்றம் மதுரை அமர்வின் அறிவித்தல் தவிர்த்த இதர அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் நடத்திட ஆணை பிறப்பித்தது.

    அதன் அடிப்படையில் அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் ஆணையம் மீண்டும் தொடர்ந்து நடத்தியது. வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் மட்டும் அறிவிக்கப்படவில்லை. உச்ச நீதிமன்றம் வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு திரும்ப அனுப்பியது.

    நிறுத்தப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவித்தல் ஆகியவற்றின் மீதான தடையினை விலக்கி தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் 3.08.2018 அன்று ஆணையிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் வழக்கு நிலுவையிலுள்ள சங்கங்களுக்கு மட்டும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    புகார்கள் மற்றும் சட்ட ஒழுங்கு மற்றும் இதர காரணங்களினால் தேர்தல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்த, ரத்து செய்யப்பட்ட, ஒத்தி வைக்கப்பட்டிருந்த, பாதியில் நிறுத்தப்பட்ட நிலுவையிலிருந்து தொடர தேர்தல் ஆணையத்தால் ஆணையிடப்பட்டுள்ள சங்கங்கள் தவிர்த்து அனைத்து சங்கங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு புதிய நிர்வாகக்குழு தேர்தல் முடிவுகளை உடன் அறிவித்திட அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

    வருகிற 6-ந்தேதி 2-ம் நிலையில் உள்ள சங்கங்களுக்கு தலைவர், துணைத்தலைவர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். 3-ம், 4-ம் நிலையில் உள்ள சங்கங்களுக்கு நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் 7-ம் தேதி அறிவிக்கப்படும். 3 மற்றும் 4 நிலையிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கான தலைவர், துணைத்தலைவர் தேர்தல் வருகிற 11-ந்தேதி நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.#CooperativeSocietiesElection

    ×