என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மே 15-ந் தேதிக்குள் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்- தமிழக அரசு உத்தரவு
- புதிதாக உறுப்பினர்களை சேர்க்க மே மாதம் 15-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.
- ஏற்கனவே உறுப்பினராக உள்ள நபர்களின் ஆதார் எண், குடும்ப அட்டை விவரங்களை 15.6.2023-க்குள் சேகரிக்க வேண்டும்.
சென்னை:
கூட்டுறவு சங்கங்களின் தேர்தல்களை சுதந்திரமாகவும் நியாயமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற வாக்காளர் பட்டியல் சரிவர தயாரிக்கப்பட வேண்டி உள்ளது.
அதற்கான கூட்டுறவு சங்கங்களின் விதிகளில் விதி மற்றும் உறுப்பினர் சேர்க்கை படிவம் 3 முக்கியமான திருத்தங்களை மேற்கொண்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி கூட்டுறவு சங்க பதிவாளரின் சுற்றறிக்கையில் உறுப்பினர் பட்டியல் தயார் செய்யவும் அதற்கான காலமும் குறிப்பிடப்பட்டு உள்ளன.
15.3.2023 உள்ள உறுப்பினர் பட்டியல் வெளியிடுதல், வருகிற 14-ந்தேதி கால வரையறை முடிவுறுகிறது.
புதிதாக உறுப்பினர்களை சேர்க்க மே மாதம் 15-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே உறுப்பினராக உள்ள நபர்களின் ஆதார் எண், குடும்ப அட்டை விவரங்களை 15.6.2023-க்குள் சேகரிக்க வேண்டும். இறந்த உறுப்பினர்களின் பட்டியலை 15.7.23-க்குள் தயாரிக்க வேண்டும். தகுதியற்ற உறுப்பினர்களின் பட்டியலை 31.7.2023-க்குள் தயாரிக்க வேண்டும். தகுதியான உறுப்பினர் பட்டியலை 16.8.2023-க்குள் வெளியிட வேண்டும்.
தகுதியான உறுப்பினர்கள் பட்டியல்கள் மீதான ஆட்சேபனை கோரிக்கை பெற 23.8.2023 வரை 7 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். ஆட்சேபனை, கோரிக்கைகள் தொடர்பாக 31.8.2023-க்குள் பதில் பெறுதல் வேண்டும். ஆட்சேபனைக்கு 15.9.2023-க்குள் பதில் அளிக்க வேண்டும். உறுப்பினர்கள் இறுதி பட்டியல் ஒப்புதலுக்கு 30 நாட்கள் 15.10.2023 வரை அவகாசம் வழங்குதல், பொதுப்பேரவை கூட்டம் நடத்தப்பட்டு தகுதியான உறுப்பினர்கள் இறுதி பட்டியல் 31.10.2023 அன்று வெளியிடப்பட வேண்டும் என்று பதிவாளர் அறிக்கை தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்