search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "co operative association election"

    • புதிதாக உறுப்பினர்களை சேர்க்க மே மாதம் 15-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.
    • ஏற்கனவே உறுப்பினராக உள்ள நபர்களின் ஆதார் எண், குடும்ப அட்டை விவரங்களை 15.6.2023-க்குள் சேகரிக்க வேண்டும்.

    சென்னை:

    கூட்டுறவு சங்கங்களின் தேர்தல்களை சுதந்திரமாகவும் நியாயமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற வாக்காளர் பட்டியல் சரிவர தயாரிக்கப்பட வேண்டி உள்ளது.

    அதற்கான கூட்டுறவு சங்கங்களின் விதிகளில் விதி மற்றும் உறுப்பினர் சேர்க்கை படிவம் 3 முக்கியமான திருத்தங்களை மேற்கொண்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

    அதன்படி கூட்டுறவு சங்க பதிவாளரின் சுற்றறிக்கையில் உறுப்பினர் பட்டியல் தயார் செய்யவும் அதற்கான காலமும் குறிப்பிடப்பட்டு உள்ளன.

    15.3.2023 உள்ள உறுப்பினர் பட்டியல் வெளியிடுதல், வருகிற 14-ந்தேதி கால வரையறை முடிவுறுகிறது.

    புதிதாக உறுப்பினர்களை சேர்க்க மே மாதம் 15-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே உறுப்பினராக உள்ள நபர்களின் ஆதார் எண், குடும்ப அட்டை விவரங்களை 15.6.2023-க்குள் சேகரிக்க வேண்டும். இறந்த உறுப்பினர்களின் பட்டியலை 15.7.23-க்குள் தயாரிக்க வேண்டும். தகுதியற்ற உறுப்பினர்களின் பட்டியலை 31.7.2023-க்குள் தயாரிக்க வேண்டும். தகுதியான உறுப்பினர் பட்டியலை 16.8.2023-க்குள் வெளியிட வேண்டும்.

    தகுதியான உறுப்பினர்கள் பட்டியல்கள் மீதான ஆட்சேபனை கோரிக்கை பெற 23.8.2023 வரை 7 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். ஆட்சேபனை, கோரிக்கைகள் தொடர்பாக 31.8.2023-க்குள் பதில் பெறுதல் வேண்டும். ஆட்சேபனைக்கு 15.9.2023-க்குள் பதில் அளிக்க வேண்டும். உறுப்பினர்கள் இறுதி பட்டியல் ஒப்புதலுக்கு 30 நாட்கள் 15.10.2023 வரை அவகாசம் வழங்குதல், பொதுப்பேரவை கூட்டம் நடத்தப்பட்டு தகுதியான உறுப்பினர்கள் இறுதி பட்டியல் 31.10.2023 அன்று வெளியிடப்பட வேண்டும் என்று பதிவாளர் அறிக்கை தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். #PMK #AnbumaniRamadoss
    சென்னை:

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டிலுள்ள மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்து 3 ஆண்டுகள் ஆகும் நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தம் இன்று வரை இறுதி செய்யப்படவில்லை. கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கூட வழங்காமல் 3 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசு இழுத்தடித்து வருவது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஐந்தாண்டுகளுக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இது தொடர்பாக அரசு பிரதிநிதிகளுக்கும், வங்கி ஊழியர் சங்கங்களுக்கும் இடையே இது குறித்து பேச்சுகள் நடத்தப்பட்டு ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவது வழக்கம்.

    அதன்படி மத்தியக் கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் 2015-ம் ஆண்டு டிசம்பருடன் முடிவடைந்து விட்ட நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தம் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், அதன்பின்னர் 34 மாதங்கள் ஆகியும் இன்று வரை கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை.

    அதேபோல், நகரக் கூட்டுறவு வங்கிகளுக்கான ஊதிய ஒப்பந்தம் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்தது. புதிய ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஊதிய ஒப்பந்தம் காலாவதியாகி 22 மாதங்கள் முடிவடைந்த போதிலும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தீர்மானிக்கப்படவில்லை.

    கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து தீர்மானிப்பதற்காக தமிழக அரசின் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்தக் குழுவினர் கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுக்களை நடத்தியது.

    கடந்த 6 மாதங்களுக்கு முன் நடைபெற்ற பேச்சுக்களின் அடிப்படையில் புதிய ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று தமிழக அரசின் சார்பில் உறுதி அளிக்கப்பட்ட போதிலும், அந்த உறுதிமொழி காப்பாற்றப்படவில்லை.

    புதிய ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படாததால் 23 மத்தியக் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் 17,000 பேருக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு 3 ஆண்டுகளாக கிடைக்கவில்லை.

    ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் அக்டோபர் 24-ந் தேதி கூட்டுறவு வங்கிகள் முன் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து 30-ந்தேதி தமிழகம் முழுவதும் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நவம்பர் 2-ந்தேதி உண்ணாநிலைப் போராட்டமும், 13ஆம் தேதி வேலைநிறுத்தமும் மேற்கொள்ளப் போவதாக கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர். ஆனால், இவை எதையுமே கண்டுகொள்ளாத தமிழக அரசு, கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மறுத்து வருகிறது.

    கூட்டுறவு வங்கிகள் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், அதனால் தான் புதிய ஊதிய ஒப்பந்தத்தை இன்னும் இறுதி செய்ய முடியவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    கூட்டுறவு வங்கிகள் கடுமையான நிதி நெருக்கடியில் தவிப்பதாகக் கூறப்படும் சூழலில் தான் தமிழக அரசு அவசர அவசரமாக கூட்டுறவு சங்கத் தேர்தல்களை நடத்தி, அ.தி.மு.க.வினரே வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது.

    அவர்களுக்கு மகிழுந்து உள்ளிட்ட சலுகைகளை தமிழக அரசு வாரி இறைக்கிறது. ஆனால், கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதில் மட்டும் இல்லாத காரணங்களைக் கூறி இழுத்தடித்து வருவது மிக மோசமான அநீதியாகும்.

    தமிழக ஆட்சியாளர்களின் இந்த அநீதி இனியும் தொடரக்கூடாது. கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும். அத்துடன் புதிய ஊதிய விகிதத்தின்படி கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையையும் அரசு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். #PMK #AnbumaniRamadoss
    ×