செய்திகள்

சோனியா காந்தி ரேபரேலி தொகுதிக்கு பிப்ரவரி 24-ம் தேதி சுற்றுப்பயணம் செல்கிறார்

Published On 2018-02-22 19:50 GMT   |   Update On 2018-02-22 19:50 GMT
முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது எம்.பி. தொகுதியான உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலிக்கு வரும் 24-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். #SoniaGandhi #RaeBareli
லக்னோ:

முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது எம்.பி. தொகுதியான உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலிக்கு வரும் 24-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ரேபரேலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

இவர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. எனவே, காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்ய வேண்டும் என காங்கிரசார் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நியமனம் செய்யப்ப்ட்டார்.

இந்நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி தனது தொகுதியான உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலிக்கு வரும் 24-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரசார் கூறுகையில், சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த சோனியா காந்தி வரும் 24-ம் தேதி அவரது தொகுதியான ரேபரேலியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது அவர் தொகுதி மக்களை சந்திப்பார் என தெரிவித்துள்ளனர். #SoniaGandhi #RaeBareli #tamilnews
Tags:    

Similar News