செய்திகள்

இளம்பெண்ணை கற்பழித்து ஆபாச படம் வெளியிட்ட ‘பேஸ்புக்’ நண்பர் கொலை - அண்ணன் தீர்த்து கட்டினார்

Published On 2018-01-22 08:11 GMT   |   Update On 2018-01-22 08:11 GMT
பஞ்சாப்பில் இளம்பெண்ணை கற்பழித்து செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து சமூக வலைகத்தில் வெளியிட்ட பேஸ்புக் நண்பரை பெண்ணின் அண்ணன் கொலை செய்தார்.
சண்டிகார்:

பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே உள்ள மோகெர் கிராமத்தை சேர்ந்தவர் லவ்டிஸ்சிங் (வயது 25). இவரது தங்கையும், தர்கா கிராமத்தை சேர்ந்த குர்பரித்சிங் (22) என்பவரும் ‘பேஸ்புக்’ மூலம் தோழர்களாக இருந்து வந்தனர்.

கடந்த மாதம் குர்பரித்சிங் அந்த பெண்ணை லூதியானாவுக்கு வரும்படி அழைத்தார். இருவரும் அங்கு சந்தித்து கொண்டனர். அப்போது குர்பரித்சிங் பெண்ணை ஏமாற்றி கற்பழித்தார். அப்போது ஆபாச படங்களையும் ரகசியமாக எடுத்தார்.

பின்னர் இந்த படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி அந்த பெண்ணிடம் பணம் பறித்து வந்தார்.

இதுபற்றி அந்த பெண் ஜலந்தர் பல்கலைக்கழகத்தில் தன்னுடன் படித்த ஜிதிந்தர்சிங் என்பவரிடம் சொல்லி குர்பரித்சிங்கை கண்டித்து வைக்கும்படி கூறினார். அதன்படி ஜிதிந்தர்சிங், குர்பரித்சிங்கை சந்தித்து எச்சரித்தார். இனிமேலும் மிரட்டினால் பெரும் பின்விளைவு ஏற்படும் என்று அவர் கூறினார்.

இதில் கோபம் அடைந்த குர்பரித்சிங் அந்த ஆபாச படங்களை இன்ஸ்ட்கிராம் இணையதளம் மூலம் வெளியிட்டார். இதுபற்றி ஜிதிந்தர்சிங் அந்த பெண்ணின் அண்ணன் லவ்டிஸ்சிங்கிடம் சென்று கூறினார்.

எனவே அவர்கள் குர்பரித்சிங்கை தீர்த்து கட்ட திட்டமிட்டனர். அவர்கள் இருவரும் தங்கள் நண்பர் ஹர்விந்தர்சிங்குடன் லூதியானா சென்றனர். அங்கு குர்பரித்சிங்கை தொடர்பு கொண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தலாம் என்று கூறி நைசாக பேசி அழைத்தனர். அதன்படி குர்பரித்சிங் அங்கு வந்தார்.

அவரிடம் 3 பேரும் பேசினார்கள். அப்போது குர்பரித்சிங்கின் போனை திடீரென பறித்து அதை சோதனை செய்தனர். அதில் குர்பரித்சிங்கும், அந்த பெண்ணும் ஒன்றாக இருக்கும் ஆபாச படங்களும் இருந்தன.

இதையடுத்து குர்பரித்சிங்கை அங்கிருந்து வலுக்கட்டாயமாக சாச்ஜோதி கிராமத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தனர். புதரில் அவரது பிணத்தை வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

குர்பரித்சிங்கை காணாததால் அவரது தந்தை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் குர்பரித்சிங்கின் உடலை நாய்கள் கடித்து தின்பதை அந்த பகுதி மக்கள் பார்த்தனர். இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அவரை கொலை செய்தது யார் என்பது தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News