search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபாச படம்"

    • புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
    • சீன நாட்டின் லோன் செயலி நிறுவனத்துக்கு அர்ஜூன்குமார் வேலை செய்து வந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூரை சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது செல்போனில், லோன் செயலி மூலம் ரூ.3 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். அந்த பணத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் அவரால் செலுத்த முடியவில்லை. அதன்பிறகு பணம் முழுவதையும் கட்டி முடித்தார். ஆனால் அதன்பிறகு அவருடைய செல்போன் எண்ணுக்கு வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், கடனுக்கான தொகையை வட்டியுடன் கூடுதலாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    அதன்பிறகு அந்த வாலிபர், கூடுதல் பணத்தை கட்டவில்லை. இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் சிறுமி ஒருவருடன் ஆபாசமாக இருப்பது போன்ற புகைப்படத்தை அந்த வாலிபரின் நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். இதைப்பார்த்து அந்த வாலிபர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பீகார் மாநிலம் மதுபானியை சேர்ந்த ரோஷன்குமார் காமத் (வயது 22) என்பவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை ஹரியானாவில் வைத்து கடந்த மாதம் கைது செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவத்தில் மற்றொரு நபரை போலீசார் தேடி வந்தனர். மேலும் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது ரபீக் சிக்கந்தர் தலைமையிலான தனிப்படையினர் பீகார் விரைந்தனர்.

    அங்கு பாட்னாவில் பதுங்கி இருந்த அர்ஜூன்குமார் (26) என்பவரை பிடித்தனர். அவர் சீன நாட்டின் லோன் செயலி நிறுவனத்துக்கு அர்ஜூன்குமார் வேலை செய்து வந்தார். அவர் கடன் வசூலிப்பு பிரிவில் குழு தலைவராக செயல்பட்டுள்ளார். ஆபாச படத்தை சித்தரித்து அனுப்பியது தொடர்பாக அர்ஜூன் குமாரை போலீசார் கைது செய்து பின்னர் திருப்பூர் அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். 

    • செயலி மூலம் கடனாக பெற்ற பணத்தை பல மடங்கு கூடுதலாக வட்டியுடன் சேர்த்து கட்ட வேண்டுமென வற்புறுத்தியுள்ளனர்.
    • போலீசார் விசாரணையில் சமந்தப்பட்ட நபர் பீகார் மாநிலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூரில் 3 வயது குழந்தையின் படத்தை மார்பிங் செய்து அனுப்பிய லோன் செயலி மூலம் மோசடி செய்யும் கும்பலை சேர்ந்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

    திருப்பூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் செல்போன் மூலம் வரும் லோன் செயலி மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லோன் பெற்றுள்ளார். இந்நிலையில் இந்த வாலிபர் குறிப்பிட்ட தேதிக்குள் பெற்ற பணத்தை திரும்ப கட்ட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த செயலியை சேர்ந்த நபர் வேறு நாட்டின் செல்போன் எண் கொண்ட ஒரு எண்ணில் அந்த வாலிபரை தொடர்பு கொண்டுள்ளனர். தொடர்பு கொண்ட நபர் செயலி மூலம் கடனாக பெற்ற பணத்தை பல மடங்கு கூடுதலாக வட்டியுடன் சேர்த்து கட்ட வேண்டுமென வற்புறுத்தியுள்ளனர்.

    அந்த வாலிபர் பணத்தை கட்ட தாமதமாகிவிட்டது. அதனால் கும்பலை சேர்ந்த நபர், லோன் பெற்ற வாலிபருடைய, நண்பரின் 3 வயது குழந்தையை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவின் பேரில், துணை கமிஷனர் வனிதா வழிகாட்டுதலின் படி, இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி மேற்பார்வையில் சைபர் கிரைம் எஸ்.ஐ சையது ரபீக் சிக்கந்தர் தலைமையில் போலீசார் நவீன்கிருஷ்ணன், கருணாசாகர், ஆறுமுகம், விஸ்வா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவம் குறித்து விசாரித்து வந்தனர்.

    போலீசார் விசாரணையில் சமந்தப்பட்ட நபர் பீகார் மாநிலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து தனிப்படை போலீசார் பீகார் விரைந்தனர். பீகார் மாநிலம், மதுபானி பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் பதுங்கியிருந்தார். அங்கு சென்று அந்த வாலிபரை போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர். போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அந்த வாலிபர் அரியானாவை சேர்ந்த ராம் சேவாக் கமட் என்பவரின் மகன் ரோசன்குமார் கமட் (22) என்பதும், அவர் லோன் செயலி மூலம் கடன் கொடுத்து விட்டு பலரின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு மேல் பலர் குழுக்களாக இருப்பதும் தெரியவந்தது.

    தொடர்ந்து திருப்பூரை சேர்ந்த 3 வயது குழந்தையின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அனுப்பியதும் ஒப்புக்கொண்டார். இதே போல் திருப்பூரில் செல்போன் செயலின் மூலம் கடன் பெற்ற பெண்களின் புகைப்படங்களையும் ஆபாசமாக சித்தரித்து அனுப்பி பணம் பறித்து மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து தனிப்படை போலீசார் ரோசன்குமார் கமட்டை திருப்பூர் அழைத்து வந்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். பீகார் சென்று கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு பாராட்டினார்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டு, பின்னர் சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்டது.
    • திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காரைக்கால்:

    காரைக்கால் திருநள்ளாறில் பிரசித்திபெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு என்று தனியாக முகநூல் (பேஸ்புக்) பக்கம் உள்ளது.

    இதில் கோவிலில் நடைபெறும் விழாக்கள், பூஜைகள் விவரம், கோவில் வரலாறு மற்றும் சாமியின் புகைப்படங்கள பதிவிடப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் கோவிலின் முகநூல் பக்கத்தை மர்ம நபர்கள் 'ஹேக்' செய்து அந்த கணக்கில் ஆபாச புகைப்படங்களை பதிவிட்டனர்.

    இதனை பார்த்த பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் முகநூல் பக்கத்தில் இருந்த ஆபாச படத்தை சைபர் கிரைம் போலீசார் உடனடியாக நீக்கினர்.

    மேலும் கோவிலின் முகநூல் பக்கத்தை ஹேக் செய்து இந்த மோசமான செயலில் ஈடுபட்டவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டு, பின்னர் சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்டது. இந்த நிலையில் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆதித்யாவின் செல்போன் காதலியின் கைக்கு கிடைத்தது. அதில் புகைப்படங்கள் இருக்கும் கேலரியை திறந்து பார்த்தார்.
    • கேலரி முழுவதையும் பார்த்தபோது கால் சென்டர் நிறுவனத்தில் வேலை செய்யும் வேறு சில பெண்களின் நிர்வாண புகைப்படங்களும் இருந்தன.

    பெங்களூரு:

    பெங்களூரு பெல்லந்தூரில் இயங்கி வரும் கால் சென்டர் நிறுவனத்தில் 23 வயது இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார்.

    இப்பெண் தன்னுடன் பணிபுரிந்த ஆதித்யா சந்தோஷ் (25) என்பவரை 4 மாதங்களாக காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் அந்தரங்கமாக இருந்தபோது புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.

    இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் ஆதித்யாவின் செல்போன் காதலியின் கைக்கு கிடைத்தது. அதில் புகைப்படங்கள் இருக்கும் கேலரியை திறந்து பார்த்தார். அப்போது தன் நிர்வாண புகைப்படம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    மேற்கொண்டு கேலரி முழுவதையும் பார்த்தபோது கால் சென்டர் நிறுவனத்தில் வேலை செய்யும் வேறு சில பெண்களின் நிர்வாண புகைப்படங்களும் இருந்தன. ஒட்டுமொத்தமாக பெண்களின் 13 ஆயிரம் நிர்வாண புகைப்படங்கள் கேலரிக்குள் இருந்தன.

    இது குறித்து கால் சென்டர் நிறுவன அதிகாரிகள் கவனத்திற்கு இளம்பெண் கொண்டு சென்றார். அவர்கள் ஒயிட் பீல்டு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து ஆதித்யா சந்தோஷ் கைது செய்யப்பட்டார். அவரது செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதனை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் புகைப்படங்கள் எடுத்து இளம்பெண்களை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் கால் சென்டர் பெண் ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மோட்டார் சைக்கிள் சாவியை பறித்து வண்டி பெட்டியில் வைத்திருந்த ரூ.45 ஆயிரத்தை எடுத்துக் கொண்டனர்.
    • கருணாகரன் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் கூடப்பாக்கம் தச்சு பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது50). இவர் கூடப்பாக்கம் மந்தைவெளியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இவர் சம்பவத்தன்று கடையில் இருந்தபோது 19 வயது இளம்பெண் ஒருவர் வீடு வாடகைக்கு கேட்பது போல் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு அவருடன் வாட்ஸ்-அப்பில் சாட்டிங் செய்துள்ளார். அதன்பிறகு கருணாகரனிடம், ஒருநாள் உங்களுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    அதன்படி இருவரும் வில்லியனூர் கணுவாப்பேட்டை சுடுகாடு அருகே புதர் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்றபோது, ஏற்கனவே இருட்டில் மறைந்திருந்த 3 வாலிபர்கள் திடீரென டார்ச் லைட் அடித்து எங்கும் ஓடக்கூடாது என மிரட்டி அந்த கோலத்திலேயே படம் எடுத்துள்ளனர்.

    பிறகு அந்த பெண்ணின் பெயரை கூறி ஆடைகளை உடுத்தி கொள்ளுமாறு கூறியுள்ளனர். அப்போது தான் இவர்கள் திட்டம் போட்டு பணம் பறிக்க அழைத்து வந்தது கருணாகரனுக்கு தெரியவந்தது.

    இதனிடையே அந்த கும்பல் கருணாகரனிடம் ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உன் போட்டோவை இணைய தளத்தில் போட்டு விடுவோம். குடும்பத்திலும் காட்டி அவமானப்படுத்துவோம் என மிரட்டியுள்ளனர்.

    மேலும் அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் சாவியை பறித்து வண்டி பெட்டியில் வைத்திருந்த ரூ.45 ஆயிரத்தை எடுத்துக் கொண்டனர். இன்னும் பணம் வேண்டும் என கேட்டு மிரட்டியதால் உடனே கருணாகரன் தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.50ஆயிரத்தை ஜிபே மூலம் கொடுத்துள்ளார்.

    ஆனாலும் மேலும் பணம் வேண்டும் என மிரட்டியதால் கருணாகரன் அவரது நண்பர் கடையில் இருந்து ரூ.30 ஆயிரத்தை வாங்கி கொடுத்தார்.

    மொத்தமாக ரூ.1.25 லட்சத்தை வாங்கி கொண்டு, செல்போனில் எடுத்த புகைப்படங்களை அழித்து விட்டதாக கூறிவிட்டு அந்த வாலிபர்களும், இளம்பெண்ணும் சென்று விட்டனர்.

    இதுகுறித்து கருணாகரன் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் வில்லியனூர் கணுவாய்பேட்டையை சேர்ந்த ராமு, பிரகாஷ், அருண்குமார் மற்றும் ராமு மனைவியின் தோழி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் தலைமறைவாக இருந்த ராமு, பிரகாஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் இளம்பெண்ணுக்கு பணம் தேவைப்பட்டதால் ராமு மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து இத்திட்டத்தை போட்டதும், கருணாகரனை கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஒருவர் அடையாளம் காட்டி இவரிடம் அதிக பணம் உள்ளது என்று கூறி சிக்க வைத்ததும் தெரியவந்தது.

    மேலும், இவர்கள் ஏற்கனவே மங்கலம் பகுதியில் ஒருவரை ஓரினசேர்க்கைக்கு அழைத்து சென்று வீடியோ எடுத்து அவரை மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து கைது செய்யப்பட்ட ராமு, பிரகாஷ் ஆகியோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இளம்பெண், அருண்குமாரை தேடி வருகின்றனர்.

    • மாநிலத்தில் அமைச்சர்கள் மட்டும் தான் பெண்களா? மற்றவர்கள் பெண்கள் இல்லையா?
    • அமைச்சர் ரோஜா படத்தின் டிரெய்லர் மட்டும் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா ஆபாச படத்தில் நடித்ததாக கூறி தெலுங்கு தேசம் கட்சியினர் சட்டசபையில் சிடிக்கள் காட்டினர். இதுகுறித்து அந்த கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தி சமீபத்தில் பேசினார்.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் ரோஜா தன்னை நிர்வாண வீடியோவில் நடித்ததாக சித்ரவதை செய்கின்றனர் என கண்ணீர் விட்டு அழுதார். இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் மாநில மகளிர் அணி தலைவி வாங்கலபுடி அனிதா கூறியதாவது:-

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி மற்றும் அவர்களது மருமகள் பிராமணியை தரக்குறைவான வார்த்தைகளில் பேசிய ரோஜா மீது காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

    மாநிலத்தில் அமைச்சர்கள் மட்டும் தான் பெண்களா? மற்றவர்கள் பெண்கள் இல்லையா? கடந்த காலங்களில் சட்டசபையில் ரோஜா பேசிய வார்த்தைகளை யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.

    பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தி பேசியதை மறைக்க ரோஜா கண்ணீர் விட்டு அழுதபடி பேசினார். ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ரோஜாவை பற்றி பேசியதால், 200 போலீசார் பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தியின் வீட்டிற்கு வந்து கைது செய்தனர்.

    ஆனால், தெலுங்குப் பெண்கள் மீது தொடர்ந்து தகாத கருத்துகளை தெரிவித்து வருபவர்கள் மீது புகார்கள் வந்தாலும், காவல்துறை நடவடிக்கை எடுப்பது இல்லை.

    ரோஜாவை யாரும் பெண்ணாக கருதுவதில்லை. ஒய்.எஸ்.ஆர் காங்கிரசில் உள்ளவர்கள் அமைச்சர் ரோஜாவை வெறுக்கிறார்கள். அமைச்சர் ரோஜா பெண்களிடம் அனுதாபம் பெறுவதற்காக ஒரு நாள் அழுதார்.

    ஆனால் 4½ ஆண்டுகால ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து பெண்களும் கதறி அழுகிறார்கள். அமைச்சர் ரோஜா படத்தின் டிரெய்லர் மட்டும் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் ஒரிஜினல் படத்தைக் வெளியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குற்றம்சாட்டப்பட்டவர் தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு மனு தாக்கல் செய்து இருந்தார்.
    • ஒருவர் தனது தனிப்பட்ட நேரத்தில் ஆபாச படம் பார்ப்பது குற்றம் இல்லை.

    தனிமையில் இருக்கும் போது, மற்றவர்களுக்கு காண்பிக்காமல் ஆபாச படம் பார்ப்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம் என்பதால், அதில் எந்த தவறும் இல்லை என்று கேரளா உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.

    இதுபோன்ற விஷயத்தை குற்றமாக அறிவிப்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவதாகவும், தனிப்பட்ட விருப்பதில் தலையிடுவதாக இருக்கும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.

    2016-ம் ஆண்டு காவல் துறையினர் 33 வயதான நபர் ஒருவர் சாலையின் ஓரத்தில் நின்றுக் கொண்டு தனது மொபைல் போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த போது கைது செய்து, அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 292-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் நீதிபதி பி.வி. குன்ஹிகிருஷ்ணன் இந்த கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

    வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு மனு தாக்கல் செய்து இருந்தார். இது தொடர்பான விசாரணையின் போது, ஆபாச படங்கள் காலம்காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் அதனை குழந்தைகள் உட்பட அனைவராலும் இயக்க முடிகிறது என்று நீதிபதி தெரிவித்து இருக்கிறார்.

    • தம்பி முத்துராஜா சில பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை காதலிப்பதாக கூறி அவர்களை வீடியோ காலில் நிர்வாணமாக பேசவைத்து அதனை பதிவு செய்து வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
    • செல்போன்கள் மற்றும் லேப் டாப்பை ஆய்வு செய்த போது, கடந்த சில மாதம் மட்டும் நூற்றுக்கணக்கான பெண்கள், மாணவிகளை ரகசியமாக வீடியோ எடுத்து அதனை லேப்டாப்பில் வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் பெருங்குடியை சேர்ந்த அண்ணன், தம்பியான முத்துராஜா (30), அங்கு குமார் (32) ஆகிய இருவரும் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலை பார்த்து வருகின்றனர். இதற்கிடையே இருவருக்கும் திருமணமாகிய நிலையில் அங்கு குமார் மதுரை விமான நிலையத்தில் தனியார் விமான நிறுவனத்தின் லக்கேஜ் பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார்.

    தம்பி முத்துராஜா பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனம் ஒன்றில் டெலிவரி பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். பெற்றோர் பொருளாதார ரீதியாக வசதியானவர்கள் என்பதால் வேலைக்கு செல்வதையே பொழுது போக்கிற்காக அண்ணன், தம்பி இருவரும் சென்று வந்துள்ளனர்.

    இருவரும் எப்போதும் இரவிலும் கூட தூங்காமல் செல்போன் மற்றும் லேப் டாப்பை பார்த்துக் கொண்டே இருந்து வருவது அவர்களின் தினசரி பழக்கமாக இருந்துள்ளது. அண்ணன், தம்பி இருவருக்கும் தனக்கு தெரிந்த நபர்களுடைய விசேஷ நிகழ்ச்சிக்கு சென்று வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தூரத்து உறவினர் வீட்டில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்கு சென்ற தம்பி முத்துராஜா அங்கு இளம்பெண் ஒருவர் வீட்டில் குளித்துக் கொண்டிருந்த போது அதனை தனது செல்போனில் ரகசியமாக படம் பிடித்துள்ளார்.

    அப்போது எதிர்பாராத விதமாக இளம்பெண் கதவைத் திறந்தபோது செல்போனில் வீடியோ பதிவு செய்ததை பார்த்து முத்து ராஜாவை திட்டியுள்ளார். மேலும் அந்த வீடியோவை அழிக்குமாறும் கூறியுள்ளார். அப்போது இதனை யாரிடமும் சொல்லக்கூடாது என முத்துக்குமார் அந்த இளம்பெண்ணிடம் கூறியுள்ளார்.

    இதனையடுத்து சில நாட்கள் கழித்து அந்த இளம்பெண் தனது உறவினர்களிடம் இது குறித்து கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார் இளம்பெண்ணை நேரில் சந்தித்து மிரட்டி நீ மற்றும் உனது சகோதரி குளிப்பது போன்ற வீடியோக்களை நானும், எனது அண்ணனும் வீடியோ எடுத்து வைத்திருப்பதாக கூறி மிரட்டி உள்ளனர்.

    மேலும் அந்த வீடியோவை அழிக்க வேண்டுமானால் ஒரு லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தெப்பக்குளம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து சரக உதவி ஆணையர் காமாட்சி உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான தனிப்படையினர் விசாரணையை தொடங்கினர்.

    இதில் செல்போனில் ஆபாசமாக வீடியோ படம் எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் அண்ணன், தம்பி இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்கள் வெளியானது.

    விசாரணையில் சகோதரர்கள் இருவரும், தாங்கள் ஒவ்வொரு விசேஷங்களுக்கு செல்லும் பொழுதும் அங்கு உடை மாற்றும் இடங்களில் செல்போனை சார்ஜ்போடுவது போலவும் மற்றும் கழிவறைகளில் செல்போன்களை மறந்து வைத்து விட்டு வருவதுபோலவும், ஆடை மாற்றுவது மற்றும் குளிப்பது போன்றவற்றை ரகசியமாக வீடியோவாக பதிவு செய்து அதனை செல்போன் மற்றும் லேப் டாப்பில் பதிவேற்றம் செய்து வைத்துள்ளனர்.

    இருவரும் தனியாக இருக்கும்போது இந்த வீடியோக்களை பார்த்து ரசிக்கும் மனநிலையில் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இருவரும் பணிபுரியும் இடங்கள் மற்றும் பொது வெளியில் செல்லும் பொழுது சந்தைகள், கடைகள் ஆகிய பகுதிகளில் பெண்களுடைய அந்தரங்க உறுப்புகளை அவர்களுக்கு தெரியாமலேயே செல்போனை மறைவாக பயன்படுத்தி படமாக எடுத்து வைத்திருக்கும் பழக்கம் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

    முதலில் அண்ணன் இதுபோன்று செல்போனில் பெண்களை மறைமுகமாக ஆபாசமாக படம் எடுப்பதை பார்த்த தம்பியும், அதே போன்று செய்ய வேண்டும் என்பதற்காக அண்ணனை பாலோ செய்து பெண்களை ஆபாசமாக மறைவிடங்களில் வைத்து வீடியோ எடுத்து வந்துள்ளான்.

    தம்பி முத்துராஜா சில பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை காதலிப்பதாக கூறி அவர்களை வீடியோ காலில் நிர்வாணமாக பேசவைத்து அதனை பதிவு செய்து வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதே போன்று முத்துராஜா தான் பழகக்கூடிய அனைத்து பெண்களிடமும் காதலிப்பதாக கூறி இதுபோன்று ஆபாச வீடியோக்களை எடுத்து அது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

    இவர்களுடைய செல்போன்கள் மற்றும் லேப் டாப்பை ஆய்வு செய்த போது, கடந்த சில மாதம் மட்டும் நூற்றுக்கணக்கான பெண்கள், மாணவிகளை ரகசியமாக வீடியோ எடுத்து அதனை லேப்டாப்பில் வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. நாகர்கோவிலில் பாலியல் வழக்கில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்திய காசியின் செயலை மிஞ்சும் வகையில் மதுரையில் அண்ணன், தம்பி இருவரும் சேர்ந்து பெண்களை ரகசியமாக ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்து ரகசியமாக பார்த்து ரசித்து வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தொடர்ச்சியாக இருவரிடமும் இருந்த வீடியோக்களை கைப்பற்றிய போலீசார் இது குறித்து வேறு யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர். தேவையான வசதிகளை பெற்றோர் ஏற்படுத்திக் கொடுத்ததால் இதுபோன்ற இச்சை செயல்களுக்கு அடிமையான அண்ணன், தம்பி இருவரும் சில ஆண்டுகளாக இதே மனநிலையில் இருந்து வந்துள்ளனர்.

    தற்போது தொழில்நுட்பம் மேம்பட்டு விட்டதால் அதனை தவறாக பயன்படுத்தும் இது போன்ற நபர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க பெண்கள், மாணவிகள் யாராக இருந்தாலும் தாங்கள் உடை மாற்றும் அறைகள், குளியலறை, படுக்கை அறைகளில் செல்போன்கள், கேமிராக்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதையும், வெளி இடங்களுக்கு செல்லும் போது ரகசிய கேமிராக்கள் உள்ளதா என ஒருமுறை மொபைல் ஆப்களின் மூலமாக சோதனை செய்து விட்டு பயன்படுத்துவது சிறந்தது எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    தற்போது செல்போன் கேமராக்களை தொடாமலே வீடியோக்களை பதிவு செய்யும் ரகசிய தொழில்நுட்பங்கள் அதிகரித்துள்ளதால், தனியார் அறைகளில் செல்போனை பயன்படுத்துவதில் கூடுதல் கவனம் தேவை என்றும் எச்சரித்துள்ளனர்.

    • மல்பே நகர போலீசார் தாமாக முன் வந்து குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 மாணவிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
    • விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி, சம்பந்தப்பட்ட மாணவிகள், கல்லூரி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    கர்நாடக மாநிலம் உடுப்பி அம்பலபாடியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் 3 பேர் கழிவறையில் ரகசிய கேமிராவை பொருத்தி சக தோழிகளை ஆபாச படம் பிடித்து தங்கள் ஆண் நண்பர்களின் வாட்ஸ்அப் குழுக்களுக்கு அனுப்பி இருக்கிறார்கள். இந்த வீடியோ வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து கல்லூரி மாணவிகள் 3 பேர் கல்லூரியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    இந்த வீடியோ விவகாரத்துக்கு இந்து அமைப்புகள், பா.ஜனதா மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள்.

    இந்த நிலையில் மல்பே நகர போலீசார் தாமாக முன் வந்து குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 மாணவிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி, சம்பந்தப்பட்ட மாணவிகள், கல்லூரி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விவகாரம் பற்றி கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா கூறும்போது, பா.ஜனதா இந்த விஷயத்தை வைத்து குட்டி அரசியலில் ஈடுபடுகின்றன. நண்பர்களுக்கு இடையே நடந்திருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. இதை ஊதி பெரிதாக்கி அரசியல் சாயம் பூச வேண்டுமா? இவையெல்லாம் கடந்த காலங்களில் கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நடக்கவில்லையா? என்றார்.

    இந்த விவகாரம் தொடர்பாக நேரில் விசாரிப்பதற்காக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு உடுப்பி சென்று உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    குழந்தைகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. பெண்களின் கண்ணியத்துடன் யாரும் விளையாட முடியாது என்று குறிப்பிட்டு உள்ளார்.

    • பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆபாச வீடியோக்களை தனது நண்பர்களுக்கு அனுப்பினார்.
    • மாணவனின் செல்போன் எண் மற்றும் ஐ.பி. முகவரி மூலம் அவர் ஆபாச படம் பதிவிறக்கம் செய்வதை கண்டுபிடித்தனர்.

    தெலுங்கானா மாநிலம், மெஹபூபாத்தை சேர்ந்த மாணவர் ராமானந்தபூரில் உள்ள என்ஜினியரிங் கல்லூரியில் எம்.சி.ஏ. படித்து வருகிறார். சிறுமிகளின் ஆபாச படங்களை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து வந்தார்.

    மேலும் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆபாச வீடியோக்களை தனது நண்பர்களுக்கு அனுப்பினார்.

    மாணவனின் இந்த செயல்களை அமெரிக்காவில் உள்ள சிறுவர் ஆபாச பதிவிறக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அமெரிக்க புலனாய்வு அமைப்பு கண்காணித்தது.

    மாணவனின் செல்போன் எண் மற்றும் ஐ.பி. முகவரி மூலம் அவர் ஆபாச படம் பதிவிறக்கம் செய்வதை கண்டுபிடித்தனர்.

    அந்நாட்டு நோடல் ஏஜென்சி மூலம் இந்தியாவில் உள்ள சிபிஐ அதிகாரிகளுக்கு மாணவர் குறித்த தகவல்களை தெரிவித்தனர்.

    சி.பி.ஐ. அதிகாரிகள் தெலுங்கானா மாநில போலீசாருக்கு அமெரிக்க புலனாய்வு அமைப்பு அனுப்பிய மாணவரின் தகவல்களை அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து தெலுங்கானா போலீசார் மாணவனின் செல்போன் டவர் மூலம் அவர் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். மாணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குறுஞ்செய்தியை அனுப்பிய வரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
    • திருமுல்லைவாயில் பவானி தெரு பகுதியை சேர்ந்த கோபி கைது செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அருகே கீழையூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் ரூ.5 ஆயிரம் தராவிட்டால் சிறுமியின் புகைப்படத்தை இணையதளத்தில் பரப்பி விடுவதாகவும், இதனை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி சிறுமிக்கு குறுஞ்செய்தி வந்தது.

    இதைத் தொடர்ந்து குறுஞ்செய்தியை அனுப்பிய வரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் விசாரணை நடத்தியதில் சென்னை திருமுல்லைவாயில் பவானி தெரு பகுதியை சேர்ந்த கோபி (வயது20) என்பவர் சிறுமியின் ஆபாச படத்தை இணையதளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதுபோன்ற குற்ற செயல்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க 8428103090 என்ற எண்ணில் என்னை தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஸ் சிங் தெரிவித்தார்.

    செக்ஸில் நெருங்கிய உறவுநிலை மற்றும் மெய்மறந்த இன்பம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கும். இது ஆன்மீகத்திற்கு ஒப்பானது என பாதிரியார் கூறியுள்ளார்.
    கரோலினா:

    கடந்த 2017-ஆம் ஆண்டு அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை சேர்ந்த நார்ம் செல்ப் என்ற 83 வயது ஓய்வு பெற்ற பாதிரியார் ஆபாச பட நடிகராக மாறினார். தனது வாழ்வின் பெரும் பகுதியை கிறிஸ்தவ ஆலயத்திலேயே செலவிட்டு வந்த அவர் தனது ஆபாச பட வாழ்வில் இருந்து கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    ஆன்மீக வாழ்வின் மகிழ்ச்சியான பகுதியாகதான் நாம் செக்ஸை நினைக்க வேண்டும். செக்ஸ் என்பது ஒரு விருந்தில் கலந்து கொள்வது போன்றது. அதனாலேயே இந்த தொழிலை செய்வதில் நான் விருப்பம் கொண்டு இருக்கிறேன். கேமராவுக்கு முன் மேற்கொள்ளும் இந்த தொழிலை நான் கட்டணம் எதுவும் பெறாமலேயே செய்து வருகிறேன். 

    ஆபாச பட நடிகராக இருப்பதில் கிடைத்த அனுபவம் மகிழ்ச்சியானது. உண்மையில் எனது உடல் ஒரு கோவில் என்பதை நான் சமீப நாட்களில்தான் கண்டறிந்து கொண்டேன். செக்ஸில் நெருங்கிய உறவுநிலை மற்றும் மெய்மறந்த இன்பம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கும். இது ஆன்மீகத்திற்கு ஒப்பானது. 

    செக்ஸ் சார்ந்த விசயங்களை ஆபத்து என கூறி வரும் சமூகம், அந்த எண்ணத்தை மாற்றும் வரை நான் ஆபாச படங்களில் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டு உள்ளேன். ஆபாசம் (போர்ன்) என்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஓர் அழுத்தப்பட்ட சுற்று சூழலில் இருந்து இறுதியாக வெளியே வந்து, ஒவ்வொரு மரபுசார்ந்த விதிகளில் இருந்தும் வெளியே வந்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அதற்குதான் இந்த சமூகம் போர்ன் என பெயரிடப்பட்டு உள்ளது. ஆபாச பட நாயகன் பட்டம் தழுவியதில் தனக்கு மகிழ்ச்சிதான்.

    இவ்வாறு நார்ம் செல்ப் கூறுகிறார்.
    ×