என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஸ்கேன் மையத்தில் பெண்கள் உடை மாற்றுவதை படம் பிடித்த ஊழியர் கைது
- ஸ்கேன் மையத்திற்கு வரும் பெண்கள் உடைகளை மாற்றும் போது தனது செல்போனில் படம் பிடிப்பதாக புகார் எழுந்துள்ளது.
- ஸ்கேன் மையம் வந்த ஒரு பெண் போலீசில் புகார் கொடுத்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டம் அடூரில் பொது மருத்துவமனை அருகே தனியார் ஸ்கேன் மையம் உள்ளது.
இங்கு தினமும் நோயாளிகள் வந்து ஸ்கேன் எடுப்பது வழக்கம். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் வருவது உண்டு. இந்த மையத்தில் ஊழியராக இருப்பவர் கொல்லம் கடக்கலைச் சேர்ந்த அஞ்சித் (வயது 34).
இவர் ஸ்கேன் மையத்திற்கு வரும் பெண்கள் உடைகளை மாற்றும் போது தனது செல்போனில் படம் பிடிப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஸ்கேன் மையம் வந்த ஒரு பெண் போலீசில் புகார் கொடுத்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்த போது, அஞ்சித் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
அவர் எவ்வளவு காலம் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்