செய்திகள்
சுற்றுலா சென்றபோது சோகம்: கேரளாவில் படகு கவிழ்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
கேரளா மாநிலத்தில் சுற்றுலா சென்ற படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 4 பெண்கள் உள்பட 6 பேர் பலியாகியது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவனந்தபுரம்:
கேரளா மாநிலத்தில் சுற்றுலா சென்ற படகு கவிழ்ந்த விபத்தில், 4 பெண்கள் உள்பட 6 பேர் பலியாகியது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் செங்கரன்குளம் என்ற பகுதியில் உள்ள நரணி ஆற்றில் இன்று மாலை நாட்டு படகு ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சுற்றுலா சென்றனர். படகை வேலாயுதன் என்பவர் ஓட்டிச் சென்றார்.
ஆற்றில் சென்று கொண்டிருந்தபோது படகு திடீரென கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் படகில் இருந்த 4 பெண்கள் உள்பட 6 பேர் பலியாகினர். மேலும், வேலாயுதன் மற்றும் 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணையில், அவர்கள் பிரசன்னா (13), வைஷ்னா (20), ஜெனிஷா (11), பூஜா (13), ஆதிநாத் (14), ஆதிதேவ் (8) என தெரிய வந்தது. படகு விபத்தில் பலியான அனைவரும் 20 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளா மாநிலத்தில் சுற்றுலா சென்ற படகு கவிழ்ந்த விபத்தில், 4 பெண்கள் உள்பட 6 பேர் பலியாகியது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் செங்கரன்குளம் என்ற பகுதியில் உள்ள நரணி ஆற்றில் இன்று மாலை நாட்டு படகு ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சுற்றுலா சென்றனர். படகை வேலாயுதன் என்பவர் ஓட்டிச் சென்றார்.
ஆற்றில் சென்று கொண்டிருந்தபோது படகு திடீரென கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் படகில் இருந்த 4 பெண்கள் உள்பட 6 பேர் பலியாகினர். மேலும், வேலாயுதன் மற்றும் 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணையில், அவர்கள் பிரசன்னா (13), வைஷ்னா (20), ஜெனிஷா (11), பூஜா (13), ஆதிநாத் (14), ஆதிதேவ் (8) என தெரிய வந்தது. படகு விபத்தில் பலியான அனைவரும் 20 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.