செய்திகள்

குஜராத் சட்டசபை தேர்தல்: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

Published On 2017-12-14 02:43 GMT   |   Update On 2017-12-14 02:44 GMT
குஜராத் சட்டசபை தேர்தலில் 93 தொகுதிகளுக்கு இரண்டாம் மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.
அகமதாபாத்:

குஜராத் மாநில சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைந்ததும் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 9-ம் தேதி 83 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 67 சதவிகித ஓட்டுகள் பதிவானதாக கூறப்பட்டது.

இந்நிலையில், 93 தொகுதிகளுக்கு இரண்டாம் மற்றும் இறுதிகட்டமாக இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 851 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்களில், 69 பேர் பெண்கள் ஆகும். 25,558 வாக்குச்சாவடிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு சற்று நேரத்திற்கு முன்னதாக தொடங்கியது. ஆண்கள் மற்றும் பெண்கள் ஆர்வமாக வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இரண்டு கட்டமாக பதிவான வாக்குகள் வரும் 18-ம் தேதி எண்ணப்படுகின்றன. வாக்குப்பதிவை ஒட்டி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News