செய்திகள்
சதானந்தமூர்த்தி

சஸ்பெண்டு செய்யப்பட்டதால் நீதிபதி தற்கொலை

Published On 2017-11-23 06:33 GMT   |   Update On 2017-11-23 06:33 GMT
திருப்பதியில் சஸ்பெண்டு செய்யப்பட்டதால் மனஉளைச்சலுக்கு ஆளான நீதிபதி தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பதி:

ஆந்திர மாநிலம் மசூலிபட்டினத்தை சேர்ந்தவர் சதானந்தமூர்த்தி (வயது 48). இவர், திருப்பதி சிவில் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தார்.

திருப்பதி கோவிலில் தரிசனத்திற்கு சென்ற போது அர்ச்சகர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதனால் அவர், வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடந்தார்.

சஸ்பெண்டு செய்யப்பட்டதால், தனக்கு உள்ள நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டதாக கருதிய அவர், மனஉளைச்சலுக்கு ஆளாகி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அவரின் குடும்பத்தினர் திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாக போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பதி ரூயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட நீதிபதிக்கு அன்னபூர்ணம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் பனராசில் ஐ.ஐ.டி.யும், மகள் அமெரிக்காவில் டாக்டருக்கும் படித்து வருகின்றனர்.
Tags:    

Similar News