செய்திகள்
பாதிக்கப்பட்ட பெண்

ம.பி: பெண் போலிசை பாலியல் தொந்தரவு செய்த கூடுதல் எஸ்.பி மீது வழக்குப்பதிவு

Published On 2017-11-22 16:21 GMT   |   Update On 2017-11-22 16:21 GMT
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பெண் கான்ஸ்டபிளை பாலியல் தொந்தரவு செய்த கூடுதல் எஸ்.பி. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போபால்:

மத்தியப்பிரதேசம் மாநில காவல் துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வரும் பெண் ஒருவர், கூடுதல் எஸ்.பி ராஜேந்திர வர்மா தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி ஏ.டி.ஜி.பி.யிடம் புகாரளிக்க சென்றுள்ளார். ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் புகாரளித்துள்ளார்.

ஆனால், புகாரளித்த கான்ஸ்டபிளை பணி நீக்கம் செய்து விடுவதாக ஏ.டி.ஜி.பி மிரட்டியுள்ளார். இந்த விவகாரம் ஊடகங்களில் செய்தியாக வெளியான நிலையில், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள அம்மாநில காவல் துறை கூடுதல் எஸ்.பி ராஜேந்திர வர்மா மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
Tags:    

Similar News