செய்திகள்

யுனெஸ்கோ பட்டியலில் சென்னை: இந்தியாவுக்கு பெருமை என மோடி வாழ்த்து

Published On 2017-11-08 13:45 GMT   |   Update On 2017-11-08 13:45 GMT
இசைத்துறையில் சிறந்த படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னையை யுனெஸ்கோ அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இசைத்துறையில் சிறந்த படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னையை யுனெஸ்கோ அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இசைத்துறையில் சிறந்த படைப்பாக நகரங்களை யுனெஸ்கோ அமைப்பு பட்டியலிட்டுள்ளது. இதில், இந்தியாவிலிருந்து சென்னை, ஜெய்ப்பூர் மற்றும் வாரணாசி ஆகிய நகரங்களும் படைப்பாக்க நகரங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி, டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சென்னையின் பாரம்பரிய இசை கலாசாரம் காரணமாக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. நமது வளமைமிக்க கலாசாரத்தில் சென்னையின் பங்களிப்பு விலை மதிப்பு இல்லாதது. இந்தியாவுக்கு இது பெருமைமிகு தருணம். இவ்வாறு கூறியுள்ளார். 
Tags:    

Similar News