செய்திகள்

டெல்லியை தொடர்ந்து மும்பையிலும் பட்டாசு விற்பனைக்கு நீதிமன்றம் தடை

Published On 2017-10-10 15:45 GMT   |   Update On 2017-10-10 15:45 GMT
தலைநகர் டெல்லியை தொடர்ந்து மும்பை நகர் பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய மும்பை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
மும்பை:


தீபாவளி பண்டிகையானது வரும் 18-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகையின் போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் சுற்றுச்சூழல் மாசு அடைவதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனையடுத்து, தலைநகர் பகுதியில் பட்டாசுகள் விற்பனை செய்ய நீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில், மும்பை மாநகர், புறநகர் பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்ய மும்பை உயர்நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்யும் கடைகாரர்களுக்கு வழங்கப்படும் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், மற்ற பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்வது 50 சதவீதமாக குறைக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News