செய்திகள்

உ.பி: மதுரா அருகே கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி

Published On 2017-09-26 03:48 GMT   |   Update On 2017-09-26 03:48 GMT
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே இன்று அதிகாலை கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
லக்னோ:

உத்தரபிரதேசம் மாநிலம் மதுரா மாவட்டம் அருகே உள்ள மஹாவன் பகுதியில் இன்று அதிகாலை சொகுசு கார் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. சாலையின் வளைவில் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக காரானது தலைகீழாக கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 5 பேர் படுகாயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News