செய்திகள்
காங்கிரஸ் மந்திரிகளின் ஊழலை 24-ம் தேதி அம்பலப்படுத்துவேன்: எடியூரப்பா கெடு
சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசில் பல துறைகளில் மந்திரிகள் செய்துள்ள ஊழல் பட்டியலை வரும் 24-ம் தேதி பா.ஜ.க., வெளியிடும் என கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
பெங்களூரு:
சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசில் பல துறைகளில் மந்திரிகள் செய்துள்ள ஊழல் பட்டியலை வரும் 24-ம் தேதி பா.ஜ.க., வெளியிடும் என கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா பெங்களூரு நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
முதல் மந்திரி சித்தராமையா மற்றும் அவரது அமைச்சரவையில் உள்ள மந்திரிகள் மீது ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் இதுவரை 35 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு புகாரில்கூட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதில்லை. இதே எதிர்க்கட்சி தலைவர் மீதான புகார் என்றால் இரண்டே நாட்களில் வழக்குப்பதிவு செய்து விடுகின்றனர் என அவர் குற்றம்சாட்டினார்.
தற்போது நடந்துவரும் காங்கிரஸ் ஆட்சியை கர்நாடக மாநிலம் இதுவரை கண்டிராத மிகவும் ஊழல் நிறைந்த ஆட்சி என்று குறிப்பிட்ட எடியூரப்பா, முதல் மந்திரி சித்தராமையா மற்றும் அவரது மந்திரிகள் ஐந்துபேர் செய்துள்ள ஊழல்கள் தொடர்பான பட்டியல் மற்றும் ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும், ஊழல் தலைவிரித்தாடும் துறைகளின் விபரங்களை வரும் 24-ம் தேதி அவர்களின் ஊழலை பகிரங்கமாக அம்பலப்படுத்துவேன் என்றும் அறிவித்துள்ளார்.
சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசில் பல துறைகளில் மந்திரிகள் செய்துள்ள ஊழல் பட்டியலை வரும் 24-ம் தேதி பா.ஜ.க., வெளியிடும் என கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா பெங்களூரு நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
முதல் மந்திரி சித்தராமையா மற்றும் அவரது அமைச்சரவையில் உள்ள மந்திரிகள் மீது ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் இதுவரை 35 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு புகாரில்கூட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதில்லை. இதே எதிர்க்கட்சி தலைவர் மீதான புகார் என்றால் இரண்டே நாட்களில் வழக்குப்பதிவு செய்து விடுகின்றனர் என அவர் குற்றம்சாட்டினார்.
தற்போது நடந்துவரும் காங்கிரஸ் ஆட்சியை கர்நாடக மாநிலம் இதுவரை கண்டிராத மிகவும் ஊழல் நிறைந்த ஆட்சி என்று குறிப்பிட்ட எடியூரப்பா, முதல் மந்திரி சித்தராமையா மற்றும் அவரது மந்திரிகள் ஐந்துபேர் செய்துள்ள ஊழல்கள் தொடர்பான பட்டியல் மற்றும் ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும், ஊழல் தலைவிரித்தாடும் துறைகளின் விபரங்களை வரும் 24-ம் தேதி அவர்களின் ஊழலை பகிரங்கமாக அம்பலப்படுத்துவேன் என்றும் அறிவித்துள்ளார்.