செய்திகள்

உ.பி.யில் துணிகரம்: இளம்பெண்ணை கூட்டாக சேர்ந்து கற்பழித்த 4 பேர் கைது

Published On 2017-07-09 13:05 GMT   |   Update On 2017-07-09 13:05 GMT
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் இளம்பெண்ணை அவரது தந்தை மற்றும் உறவினர் முன்னால் ஒரு கும்பல் கூட்டாக சேர்ந்து கற்பழித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் - பீகார் மாநில எல்லையோரப் பகுதியான பாலியா நகரில் உள்ள ரேவ்டி பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் நேற்று வீட்டில் தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வீட்டுக்கு வந்த ஒரு கும்பல், அந்த இளம்பெண்ணை கூட்டாக சேர்ந்து கற்பழித்துள்ளது. இச்சம்பவம் அந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர் கண்முன்னால் நடந்தது. அதன்பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.

இதுதொடர்பாக பெண்ணின் உறவினர்கள் ரேவ்டி போலீசி புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராகுல், தேவநாத், பீம் மற்றும் ராஜா ஆகியோரை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம். அறிக்கை வந்தபின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News