இந்தியா

சட்டப்பிரிவு 370 மயானத்தில் புதைக்கப்பட்டுள்ளது: மீட்கும் கனவை காங்கிரஸ் மறந்துவிட வேண்டும்- பிரதமர் மோடி

Published On 2024-05-18 19:24 IST   |   Update On 2024-05-18 19:25:00 IST
  • காஷ்மீரில் இனிமேல் மூவர்ணக்கொடி மட்டுமே பறக்கும்.
  • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவோம் என்ற கனவை மறந்து விடுங்கள்.

பிரதமர் மோடி இன்று அரியானா மாநிலம் சோனிபட் கோஹனாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்ட பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

2024 மக்களவை தேர்தல் ஒரு போர் போன்றது. ஒரு மக்கள் வளர்ச்சி, மறுபக்கம் வாக்கு ஜிஹாத். யார் வெற்றி பெறுவார்கள்? என்பதை அரியானா மக்களிடம் கேட்க விரும்புகிறேன். (சிறிது நேரம் காத்திருந்த மோடி, மோடி ஆட்சி என்று மக்கள் முழக்கமிட்டதை சுட்டிக்காட்டி) உங்கள் பதில் முடிவு செய்துள்ளது.

காஷ்மீரில் இனிமேல் மூவர்ணக்கொடி மட்டுமே பறக்கும் என தைரியத்திற்கு பெயர்போன அரியானா மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிக்கும் சொல்ல விரும்புகிறேன்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவோம் என்ற கனவை மறந்து விடுங்கள். நீங்கள் முயற்சி செய்தால் அதற்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். தடையாக விளங்கிய சட்டப்பிரிவு 370-ஐ நாங்கள் மயானத்தில் புதைத்துவிட்டோம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசும்போது தெரிவித்தார்.

Tags:    

Similar News