செய்திகள்

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். எஸ்.ஐ. பலி

Published On 2017-06-24 15:04 GMT   |   Update On 2017-06-24 15:04 GMT
காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த படைவீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் சி.ஆர்.பி.எப். எஸ்.ஐ. ஒருவர் பலியானார்.
ஸ்ரீநகர்:

காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர்- ஜம்மு தேசிய நெடுஞ்சாலை பந்தா சவுக் பகுதியில் இன்று மாலை சி.ஆர்.பி.எப். படைவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் சிலர் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.

அவர்களது தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் போலீசாரும் துப்பாக்கிகளால் திருப்பி சுட்டனர். இதனால் தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எப். படைப்பிரிவின் எஸ்.ஐ-யான சாகிப் சுக்லா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். ஜீப் டிரைவர் நிசார் அகமது படுகாயம் அடைந்தார்.

சக வீரர்கள் காயமடைந்தவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News