செய்திகள்

மாட்டைக் காப்பாற்றும் முயற்சியில் மனிதர்கள் மீது மோதிய போலீஸ் ஜீப் - ஒரு பெண் பலி

Published On 2017-06-03 09:49 GMT   |   Update On 2017-06-03 09:49 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மாட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக திருப்பியதால் நிலை தடுமாறிய போலீஸ் ஜீப், சாலையக் கடந்து சென்ற மனிதர்கள் மீது மோதியதில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மாட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக திருப்பியதால் நிலை தடுமாறிய போலீஸ் ஜீப், சாலையக் கடந்து சென்ற மனிதர்கள் மீது மோதியதில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

உத்தரபிரதேசம் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஹர்ரியா என்ற பகுதியில் இன்று போலீஸ் ஜீப்பானது சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென குறுக்கே மாடு வந்ததால், டிரைவர் ஜீப்பை சட்டென்று திருப்பியுள்ளார். 

இதனால், கட்டுப்பாட்டை இழந்த வாகனமானது அந்த சாலையை கடந்து சென்ற பொதுமக்கள் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் உஷா தேவி என்ற 60 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், 2 குழந்தைகள் உள்ளிட்ட மூவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஜீப்பை ஓட்டி வந்த டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News