இந்தியா

பவன் கல்யாணுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த நடிகர் மீது பாட்டில் வீச்சு

Published On 2024-05-06 08:59 GMT   |   Update On 2024-05-06 08:59 GMT
  • ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் பாட்டிலை எடுத்து சாய் தரம் தேஜை நோக்கி வீசினார்.
  • கட்சித் தொண்டர்கள் ஸ்ரீதரை மீட்டு பிதாபுரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

திருப்பதி:

ஆந்திராவில் உள்ள பித்தாபுரம் சட்டமன்ற தொகுதியில் நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் போட்டியிடுக்கிறார்.

அவரை ஆதரித்து அவரது சகோதரி மகன் நடிகர் சாய் தரம் தேஜ் நேற்று இரவு காக்கிநாடா மாவட்டம் கஜ்ஜாலா மைதானத்தில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் பாட்டிலை எடுத்து சாய் தரம் தேஜை நோக்கி வீசினார். அதிர்ஷ்டவசமாக பாட்டில் சாய் தரம் தேஜ் மீது விழாமல் அருகில் இருந்த ஸ்ரீதர் என்பவர் தலை மீது விழுந்தது.

இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. கட்சித் தொண்டர்கள் ஸ்ரீதரை மீட்டு பிதாபுரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News