இந்தியா

கேரளாவில் பினராயி விஜயன் கொடும்பாவி எரித்து காங்கிரஸ் போராட்டம்

Published On 2024-05-19 10:27 IST   |   Update On 2024-05-19 10:27:00 IST
  • பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
  • கேரளாவில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் புகார்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக இளைஞர் காங்கிரஸ் கட்சியினர், ஆளும் கட்சி மீது புகார் கூறி வருகின்றனர். மேலும் இதற்கு பொறுப்பேற்று முதல்-மந்திரி பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முதல்-மந்திரி பினராயி விஜயன் வீட்டுக்கு பேரணி யாக சென்ற இளைஞர் காங்கிரசார், அங்கு அவரது உருவப்பொம்மையையும் எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ள நிலையில், முதல்-மந்திரி பினராயி விஜயன் குடும்பத்தினருடன் விடுமுறையில் வெளிநாடு சென்றதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்களும் எழுப்பப் பட்டன.

Tags:    

Similar News