search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parliament election"

    • வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு பாஜக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
    • இதுவரை 15 நபர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

    சென்னை:

    ஏப்ரல் 6-ந்தேதி தாம்பரம் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அப்பணத்தைக் கொண்டு வந்த சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூவரையும் கைது செய்து, அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அதில், அந்த பணம் சென்னையில் பல்வேறு பகுதிகளிலிருந்து கைமாற்றப்பட்டு நெல்லை பாராளுமன்றத் தொகுதியின் தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்படுவதாகவும், இது நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான பணம் எனவும் வாக்குமூலம் அளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு பாஜக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

    இதுவரை 15 நபர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

    இந்த ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், பா.ஜ.க. மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகருக்கு தொடர்பு உள்ளதா என விசாரணை செய்ய முடிவு செய்து, அவருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில், கடந்த 11-ல் சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் எஸ்.ஆர்.சேகர், பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் உடன் ஆஜராகினர்.

    இந்த விவகாரத்தில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருந்தார். இந்த நிலையில் இன்று காலை 10.20 மணிக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அவர் ஆஜர் ஆனார்.

    ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு தொடர்பாக நயினார் நாகேந்திரனிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் வைத்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

    சம்பந்தபட்ட இடங்களில் சோதனை செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட இருப்பதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விசாரணை என்பது இன்று மாலை வரை நடைபெறும் என சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • நமக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ளது.
    • நல்ல கூட்டணி அமையுமா? அமையாதா? என்று யாரும் கவலைப்படாதீர்கள். அதனை நான் பார்த்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கடந்த 10-ந்தேதி முதல் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    தினமும் 3 பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், முன்னணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் எடப்பாடி பழனிசாமி தேர்தல் தோல்வி தொடர்பாக கருத்துக்களை கேட்டு வருகிறார். பாராளுமன்ற தேர்தலில் பலம் வாய்ந்த கூட்டணி அமையாததே தோல்விக்கு காரணம் என்று கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

    இதற்கு பதில் அளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் வலுவான கூட்டணியை அமைப்போம் என்று கூறியுள்ளார்.

    இந்த நிலையில் 4-வது நாளான இன்று சிதம்பரம் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பேசிய சிதம்பரம் தொகுதி நிர்வாகிகள், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற மேல் மட்ட நிர்வாகிகள் சரியாக உழைக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.

    கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    பாராளுமன்ற தேர்தலில் நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை/ அதனால் யாரும் சோர்ந்து போய் விடாதீர்கள். நமக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ளது. வரும் காலங்களில் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். கட்சியில் உள்ள மாவட்ட நிர்வாகிகள், கீழ்மட்ட தொண்டர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். நல்ல கூட்டணி அமையுமா? அமையாதா? என்று யாரும் கவலைப்படாதீர்கள். அதனை நான் பார்த்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு வழங்கப்பட வேண்டிய பயணப்படி இன்னும் வழங்கப்படாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
    • 83 நாட்களுக்கான பயணப்படி வழங்க ஒப்புதல் அளித்து கடந்த ஏப்ரல் மாதமே அரசாணை பிறப்பித்த பிறகும், இன்னும் காவலர்களுக்கான பயணப்படி வழங்கப்படவில்லை.

    சென்னை:

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில், பாராளுமன்றத் தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு வழங்கப்பட வேண்டிய பயணப்படி இன்னும் வழங்கப்படாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    கடந்த மார்ச் 16-ந்தேதி முதல் ஜூன் 6-ந்தேதி வரையிலான 83 நாட்களுக்கான பயணப்படி வழங்க ஒப்புதல் அளித்து கடந்த ஏப்ரல் மாதமே அரசாணை பிறப்பித்த பிறகும், இன்னும் காவலர்களுக்கான பயணப்படி வழங்கப்படவில்லை.

    ஏற்கனவே, காவல்துறையினரின் கைகளைக் கட்டிப்போட்டு, சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்து வைத்திருக்கிறது திமுக அரசு. தேவையில்லாத வீண் விளம்பரங்களுக்கு, பல கோடி ரூபாய் மக்களின் வரிப்பணத்தை செலவு செய்வதில் முனைப்பாக இருக்கும் திமுக அரசு, காவலர்களுக்கு வழங்க வேண்டிய பயணப்படியை வழங்கத் தாமதிப்பது, காவல்துறையினரிடையே பணியாற்றும் ஆர்வத்தைக் குறைத்து விடும். உடனடியாக, தேர்தல் பணிகளில் ஈடுபட்ட காவலர்களுக்கு, 83 நாட்களுக்கான பயணப்படியை வழங்க வேண்டும் என்று பாரதிய ஜனதா சார்பாக வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாங்கள் துணை சபாநாயகர் பதவி பற்றி கேட்டோம். அப்போது எங்களுக்கு எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை.
    • இந்தத் தேர்தலின் முழுப்பொறுப்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமையால்தான் என்றார்.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதியாக தேர்வானவர்கள் எம்.பி.க்களாக பதவி ஏற்றுக்கொண்டுள்ளனர். கடந்த 24-ந்தேதி தொடங்கிய முதல் நாள் பாராளுமன்ற கூட்டத்தில் 262 பேரும், நேற்று 271 பேரும் எம்.பி.க்களாக பதிவியேற்றுக்கொண்டுள்ளனர்.

    புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதற்காக ஒடிசாவை சேர்ந்த மகதாப்பை தற்காலிக சபாநாயகராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து அவரது முன்னிலையில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்.

    இதையடுத்து, பாராளுமன்ற சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 11 மணிக்கு நடைபெற இருக்கிறது. பாராளுமன்ற வரலாற்றில் மூன்றாவது முறையாக நடைபெற இருக்கும் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்கட்சிகள் சார்பில் மவெலிக்கரா எம்.பி. கே. சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இந்த நிலையில், சபாநாயகர் தேர்தலில் எதற்காக போட்டியிடுகிறோம் என்பது குறித்து எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுரேஷ் கூறியதாவது:-

    நாங்கள் சபாநாயகருக்கு எதிராக தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. ஆனால் மோடி தலைமையிலான அரசாங்கம், இந்திய கூட்டணியை குறிப்பாக காங்கிரஸ் கட்சித் தலைமையை அணுகியபோது, நாங்கள் துணை சபாநாயகர் பதவி பற்றி கேட்டோம். அப்போது எங்களுக்கு எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை.

    முதலில் நீங்கள் சபாநாயகர் தேர்தலை ஆதரவு அளிங்கள், அதன் பிறகு துணை சபாநாயகரை பற்றி பேசலாம் என்றனர்.

    அந்த பதில் எங்களுக்கு திருப்திகரமாக இல்லை. எனவே, சபாநாயகர் தேர்தலில் போட்டியிட எங்கள் தலைவர்கள் முடிவு செய்தனர்.

    இந்த தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிடிவாதமான நிலைப்பாட்டால் ஏற்பட்டது. இல்லாவிட்டால் தவிர்த்திருக்கலாம். ஆனால், அவர்கள் எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைக்க தயாராக இல்லை. துணை சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சிக்கு வாய்ப்பளிக்க தயாராகவும் இல்லை.

    அதனால் தான் இன்று தேர்தல் நடக்கிறது. ஆனால், இந்தத் தேர்தலின் முழுப்பொறுப்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமையால்தான் என்றார்.

    • மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.
    • நாளை புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதியாக தேர்வானவர்கள் எம்.பி.க்களாக பதவி ஏற்பது நேற்று தொடங்கியது.

    பாராளுமன்றம் நேற்று தொடங்குவதற்கு முன்பு புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதற்காக ஒடிசாவை சேர்ந்த மகதாப்பை தற்காலிக சபாநாயகராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து அவரது முன்னிலையில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்.

    முதலில் பாராளுமன்ற ஆளும்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் பிரதமர் மோடி அழைக்கப்பட்டு எம்.பி.யாக பதவி ஏற்றார். அவரைத் தொடர்ந்து மத்திய மந்திரிகள் பதவி ஏற்றனர். அதன் பிறகு மாநிலம் வாரியாக ஆங்கில அகர வரிசைபடி எம்.பி.க்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகு புதிய எம்.பி.க்கள் அதற்கான கோப்பில் கையெழுத்திட்டனர். நேற்று மொத்தம் 262 பேர் புதிய எம்.பி.க்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

    இன்று 2-வது நாளாக பாராளுமன்றத்தில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர். அனைத்து எம்.பி.க்களும் தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இன்று மொத்தம் 271 எம்.பி.க்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். இன்று மாலையுடன் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழா நிறைவுக்கு வருகிறது. நாளை புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

    இதனிடையே துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க பா.ஜ.க. மறுத்துவிட்டதால் தேசிய ஜனநாயக கூட்டணி சபாநாயகர் வேட்பாளர் ஓம் பிர்லாவுக்கு ஆதரவு அளிக்காமல் தேர்தலில் போட்டியிட இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது.

    எனினும், மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் இந்தியா கூட்டணி சார்பில் மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட கேரள காங்கிரஸ் எம்.பி.கொடிக்குன்னிஸ் சுரேஷ் மனுத்தால் செய்துள்ளார்.

    இந்நிலையில், மக்களவை துணை சபாநாயகர் பதவியை பெறுவது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் இன்று இரவு 8 மணிக்கு பாராளுமன்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய பாராளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மக்கள் 3-வது முறையாக வாய்ப்பளித்து உள்ளதால் முன்பைவிட 3 மடங்கு உற்சாகத்துடன் நாம் செயல்பட வேண்டும்.
    • 140 கோடி மக்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் புதிய எம்.பி.க்கள் செயல்பட வேண்டும்.

    புதுடெல்லி:

    18-வது பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது.

    புதிய உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்கு ஏதுவாக தற்காலிக சபாநாயகராக பா.ஜனதாவை சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தற்காலிக சபாநாயகராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள மஹ்தாபுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுக்கு மஹ்தாபு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

    இந்நிலையில் பாராளுமன்றத்திற்கு வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    * 18வது மக்களவை இன்று தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய தேர்தல் மிகவும் பிரமாண்டமாகவும், கம்பீரமாகவும் நடத்தப்பட்டது.

    * புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள், வரவேற்பை தெரிவித்துக்கொள்கிறேன்.

    * 60 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    * மக்கள் 3-வது முறையாக வாய்ப்பளித்து உள்ளதால் முன்பைவிட 3 மடங்கு உற்சாகத்துடன் நாம் செயல்பட வேண்டும்.

    * எங்களின் நோக்கம், செயல்பாடு ஆகியவற்றுக்காகவே மக்கள் தொடர்ந்து 3-வது முறையாக வாய்ப்பளித்துள்ளனர்.

    * ஆட்சியை வழிநடத்த பெரும்பான்மை அவசியம். நாட்டை வழிநடத்த ஒத்துழைப்பு முக்கியம்.

    * அனைவரையும் ஒருங்கிணைத்து பாராளுமன்றத்தின் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும்.

    * 140 கோடி மக்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் புதிய எம்.பி.க்கள் செயல்பட வேண்டும்.

    * நாட்டு மக்களுக்கு சேவையாற்ற எதிர்க்கட்சிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    • ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை.
    • பாராளுமன்றத்துக்கு புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட 543 எம்.பி.க்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது. மொத்தம் உள்ள 543 இடங்களில் பா.ஜனதா தனித்து 240 இடங்களை பெற்றது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை.

    அதேநேரம் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை பெற்றதால், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தது. இதையடுத்து கடந்த 9-ம் தேதி பிரதமர் மோடி, தலைமையிலான புதிய கூட்டணி அரசு பதவி ஏற்றது. பிரதமருடன் 72 மத்திய மந்திரிகளும் பதவி ஏற்றனர். மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றதன் மூலம், நேருவின் சாதனையை சமன் செய்தார்.

    இதையடுத்து 18-வது பாராளுமன்றம் இன்று காலை கூடுகிறது. பாராளுமன்றத்துக்கு புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட 543 எம்.பி.க்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

    புதிய உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்கு ஏதுவாக தற்காலிக சபாநாயகராக பா.ஜனதாவை சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தற்காலிக சபாநாயகராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள மஹ்தாபுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுக்கு மஹ்தாபு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

    • மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றதன் மூலம், நேருவின் சாதனையை சமன் செய்தார்.
    • புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது. மொத்தம் உள்ள 543 இடங்களில் பா.ஜனதா தனித்து 240 இடங்களை பெற்றது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை.

    அதேநேரம் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை பெற்றதால், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தது. இதையடுத்து கடந்த 9-ம் தேதி பிரதமர் மோடி, தலைமையிலான புதிய கூட்டணி அரசு பதவி ஏற்றது. பிரதமருடன் 72 மத்திய மந்திரிகளும் பதவி ஏற்றனர். மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றதன் மூலம், நேருவின் சாதனையை சமன் செய்தார்.

    இதையடுத்து 18-வது பாராளுமன்றம் இன்று காலை கூடுகிறது. பாராளுமன்றத்துக்கு புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட 543 எம்.பி.க்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறும்.

    புதிய உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்கு ஏதுவாக தற்காலிக சபாநாயகராக பா.ஜனதாவை சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 7 முறை பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்காலிக சபாநாயகராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள மஹ்தாபுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். இந்த நிகழ்ச்சி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும்.

    இதையடுத்து அவர் பாராளுமன்றத்துக்கு வந்து, காலை 11 மணிக்கு பாராளுமன்ற கூட்டத்தை முறைப்படி தொடங்கிவைப்பார். அதன்பிறகு மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும்.

    பின்னர் மக்களவை பொதுச்செயலாளர் உத்பால் சிங், பாராளுமன்ற மக்களவைக்கு புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்களின் பட்டியலை, அவை மேஜையில் வைப்பார்.

    அதன்பிறகு எம்.பி.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி தொடங்கும். முதலில் பிரதமர் மோடியை, எம்.பி.யாக பதவி ஏற்க வருமாறு அழைப்பு விடுக்கப்படும். அவருக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

    சபாநாயகர் தேர்தல் நடைபெறும் வரை அவை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தற்காலிக சபாநாயகருக்கு உதவுவதற்காக ஜனாதிபதியால் தலைவர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொடிகுன்னில் சுரேஷ் (காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (தி.மு.க.), ராதா மோகன் சிங் (பா.ஜனதா), பக்கன் சிங் குலாஸ்தே (பா.ஜனதா), சதீப் பந்தோப்பாத்யாய் (திரிணாமுல் காங்கிரஸ்) ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். தொடர்ந்து மந்திரிகளும் எம்.பி.க்களாக பதவி ஏற்பார்கள்.

    பின்னர் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும்.

    புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அகர வரிசைப்படி அழைக்கப்பட்டு பதவிப்பிரமாணம் எடுப்பார்கள்.

    இதையடுத்து நாளை மறுநாள் (புதன்கிழமை) மக்களவையின் புதிய சபாநாயகர் தேர்தல் நடைபெறும். இதுவரை ஒருமித்த கருத்து அடிப்படையிலேயே சபநாயகர் தேர்ந்து எடுக்கப்பட்டு வந்துள்ளார்.

    ஆனால் இந்தமுறை எதிர்க்கட்சிகள் அதிக பலத்துடன் இருப்பதால், ஆளும் கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், சபாநாயகர் தேர்தலில் ஆளும் கூட்டணி வேட்பாளருக்கு எதிராக இந்தியா கூட்டணியும் வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அவ்வாறு எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்தினால், சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறும்.

    இதன்பிறகு பிரதமர் மோடி, தனது மந்திரிகளை சபைக்கு அறிமுகம் செய்து வைப்பார்.

    மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக்கூட்டம் 27-ம் தேதி நடைபெறும். இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுவார்.

    ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 28-ம் தேதி தொடங்கும். ஜூலை 2 அல்லது 3-ம் தேதி விவாதத்திற்கு பிரதமர் மோடி பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பிறகு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக இரு அவைகளும் ஒத்திவைக்கப்படும். ஜூலை 22-ம் தேதி மீண்டும் பாராளுமன்றம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நாட்டையே பரபரப்பாக்கியுள்ள நீட் தேர்வு முறைகேடு விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ள பரபரப்பான சூழ்நிலையில், பாராளுமன்றம் கூடுகிறது.

    எனவே நீட் தேர்வு முறைகேடு, பல்கலைக்கழக பேராசிரியர் தேர்வு (நெட்) முறைகேடு, முதுகலை நீட் தேர்வு ரத்து உள்ளிட்டவை இந்த பாராளுமன்ற கூட்டத்தில் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் வேலைவாய்ப்பு இன்மை, மாநிலங்களுக்கான நிதி பங்கீடு விவகாரம், சாதிவாரி கணக்கெடுப்பு, அக்னிவீர் திட்டம் ஆகியவற்றையும் எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2 முறையும் தனிப்பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் பா ஜனதா இருந்ததால், எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சனைகளை எளிதில் சமாளித்து வந்தனர்.

    ஆனால் இந்த முறை எதிர்க்கட்சிகளின் பலம் அதிகரித்து உள்ளதால், பல்வேறு விவகாரங்களில் பாராளுமன்றத்தில் அனல் பறக்கும்.

    இதனிடையே பாராளுமன்ற தற்காலிக சபாநாயகர் தேர்ந்து எடுக்கப்பட்டதில் சர்ச்சை எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரான கொடிகுன்னில் சுரேசுக்குதான் இந்த பதவி வழங்கப்பட்டு இருக்க வேண்டும். அவரே மிக மூத்த உறுப்பினர் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. மற்ற எதிர்க்கட்சிகளும் காங்கிரசின் கருத்துக்கு ஆதரவு அளித்துள்ளது.

    இதற்கு பதில் அளித்த பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, மஹ்தாப் தொடர்ந்து 7 முறை எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். அதே நேரம் கொடிகுன்னில் சுரேஷ் 1998 மற்றும் 2004 தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளார். எனவே மஹ்தாப் தற்காலிக சபாநாயகராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார் என்று கூறினார். ஆனால் இதனை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அனைத்து கருதுகணிப்புகளையும் பொய்யாக்கி இந்தியா கூட்டணி 235 இடங்களில் வென்றது பாஜகவுக்கு பேரிடியாக அமைந்தது.
    • பங்குசந்தையில் முறைகேடு செய்யவே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிலையில் காங்கிரசின் இந்தியா கூட்டணி 235 இடங்களிலும் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் வலுவான சக்தியாக உருவெடுத்துள்ளது.

    முன்னதாக தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெரும் எனவும் காங்கிரஸ் ஒற்றை இலக்கத்தில் தான் இடங்களைக் கைப்பற்றும் எனவும் கணித்திருந்தன. இந்த கருத்துக்கணிப்புகள் பாஜகவால் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியிருந்தன.

    இதற்கிடையே ஜூன் 4 ஆம் தேதி அனைத்து கருதுகணிப்புகளையும் பொய்யாக்கி இந்தியா கூட்டணி 235 இடங்களில் வென்றது பாஜகவுக்கு பேரிடியாக அமைந்தது. வட மாநிலங்களில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஆர்.ஜே.டி ஆகியவற்றின் தயவுடனேயே பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானதும் இந்திய பங்குச் சந்தையில் பங்குகளின் விலை அதிரடியாக உயர்ந்தது. பங்குசந்தையில் முறைகேடு செய்யவே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்நிலையில் கருத்துக்கணிப்பை வெளியிட்ட பல்வேறு நிறுவனங்களில் முக்கியமானதாக விளங்கும் ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் மீதும் இந்த குற்றச்சாட்டு வலுவாக முன்வைக்கப்டுகிறது.

    எனவே செபி அமைப்பு மற்றும் பாராளுமன்ற குழு இணைந்து ஆக்சிஸ் மை இந்தியா மீது விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மேலும் வருங்காலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

     

     தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தற்போது பதிலளித்துள்ள ஆக்சிஸ் மை இந்தியா தலைவர் பிரதீப் குப்தா, அனைத்து வகையான விசாரணைக்கும் தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். பங்குச் சந்தைக்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று முற்றிலுமாக மறுத்துள்ள அவர் வருங்காலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என்பது குழந்தைத்தனமானது என்றும் விமர்சித்துள்ளார். இந்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 361 முதல் 401 இடங்களைக் கைப்பற்றும் என ஆக்சிஸ் மை இந்தியா கணித்தது.  முன்னதாக பிரதீப் குப்தா தேர்தல் ரிசல்ட் நாளன்று பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறாததால் தொலைக்காட்சி விவாத மேடையில் கதறி அழுதது குறிப்பிடத்தக்கது.

    • யாத்திரையின் போது எதிர்க்கட்சிகள் செய்த ஒவ்வொரு தவறான பிரசாரத்துக்கும் சரியான விளக்கம் அளித்து மக்களிடம் தெளிவை ஏற்படுத்த வேண்டும் என்றும் நட்டா கூறி இருக்கிறார்.
    • அடுத்த சில நாட்களில் யாத்திரை பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை கட்சி மேலிடம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கும் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் 3-வது முறையாக பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியமைத்ததை தொடர்ந்து நாடு முழுவதும் நன்றி தெரிவித்து யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இந்த யாத்திரையை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைக்கிறார்.

    இந்த யாத்திரையை அனைத்து பாராளுமன்றத் தொகுதிகளிலும் மக்களை சந்திக்கும் யாத்திரையாக நடத்தி தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்ல முடிவு செய்து உள்ளார்கள்.

    முக்கியமாக இந்த தேர்தலில் காங்கிரஸ், வித்தியாசமான தேர்தல் அணுகுமுறையை கையாண்டது. அப்போது பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டத்தை மாற்றி விடுவார்கள். மனு தர்ம சட்டங்களை கொண்டு வருவார்கள் என்று ராகுல் காந்தி பிரசாரம் செய்தார்.

    இந்த பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபட்டது. அவர்களை நம்பவும் வைத்தது. எனவே, பா.ஜ.க. யாத்திரையை மாவட்டம், தொகுதி, மண்டல அளவில் நடத்தவும் யாத்திரையின் போது எதிர்க்கட்சிகள் செய்த ஒவ்வொரு தவறான பிரசாரத்துக்கும் சரியான விளக்கம் அளித்து மக்களிடம் தெளிவை ஏற்படுத்த வேண்டும் என்றும் நட்டா கூறி இருக்கிறார்.

    அடுத்த சில நாட்களில் யாத்திரை பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை கட்சி மேலிடம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கும் என்று கூறப்படுகிறது.

    • 40 தொகுதியும் வென்ற தி.மு.க. கூட்டணி இனிமேலாவது மக்களுக்கு பயனுள்ளவாறு செயல்பட வேண்டும்.
    • கடந்த 5 ஆண்டு வெளிநடப்பு மட்டுமே செய்தது தி.மு.க .கூட்டணி.

    நெய்வேலி:

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க. சார்பில் கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இயக்குனர் தங்கர் பச்சான் போட்டியிட்டார். ஆனால் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். எனினும் இயக்குனர் தங்கர் பச்சான் கடலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

    அதன்படி, அவர் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சமட்டிக்குப்பம் புலியூர் சத்திரம் ஆயிப்பேட்டை, வெங்கடாம்பேட்டை, பாச்சாரப்பாளையம், வடக்குத்து, வடக்குமேலூர், இந்திராநகர், 30 வட்டம் அடங்கிய நெய்வேலி நகரம் உள்ளிட்ட 50 மேற்பட்ட கிராமங்களில் மக்களை சந்தித்து நன்றி கூறினார். அப்போது நிருபரிடம் அவர் கூறியதாவது,

    மக்களை சந்தித்து நான் நன்றி சொன்னால் மக்கள் எனக்கு ஆறுதல் கூறுகிறார்கள். என்னை பார்த்து கண்ணீர் விடுகிறார்கள். நான் தோற்றாலும் என் மக்களுக்கு செய்ய வேண்டிய சேவையை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன்.

    40 தொகுதியும் வென்ற தி.மு.க. கூட்டணி இனிமேலாவது மக்களுக்கு பயனுள்ளவாறு செயல்பட வேண்டும். கடந்த 5 ஆண்டு வெளிநடப்பு மட்டுமே செய்தது தி.மு.க .கூட்டணி.

    பாஜக மீதான விரோத போக்கை கைவிடப்பட்டால் மட்டுமே தமிழகத்திற்கு நல்லது நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியடைய செய்தது.
    • திருச்சூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்காக காரணங்கள் குறித்து விசாரணை நடத்த உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த மாதம் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ், பாஜக மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது.

    ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு, சசதரூர் போட்டியிட்ட திருவனந்தபுரம், நடிகர் சுரேஷ்கோபி போட்டியிட்ட திருச்சூர் ஆகிய தொகுதிகள் நட்சத்திர தொகுதிகளாக கருதப்பட்டன. அந்த தொகுதிகளில் எந்த கட்சி வெற்றிபெறும்? என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் இருந்தது.

    இந்தநிலையில் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தியும், திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூரும், திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபியும் வெற்றி பெற்றனர்.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் இந்த முறை 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தன்வசம் இருந்த திருச்சூரில் தொகுதியில் தோல்வியை தழுவியது.

    அந்த தொகுதியில் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்ட சுனில்குமார் 2-வது இடத்தை பிடித்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட முரளிதரன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியடைய செய்தது. தனது கைவசம் இருந்த தொகுதியை இழந்தது மட்டுமின்றி, 3-வது இடத்துக்கு சென்றது ஏன்? என்ற கேள்வி எழுந்தது.

    தேர்தல் கமிட்டிகள் மற்றும் பூத் கமிட்டிகளை திறம்பட அமைக்கப்படாததும், காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் முரளிதரனுக்கு எதிராக செயல்பட்டதுமே காங்கிரஸ் கட்சி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக 3 பேர் கொண்ட விசாரணை குழுவை கட்சி தலைமை நியமித்துள்ளது. அந்த குழுவில் சித்திக் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கே.சி.ஜோசப், ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    அவர்கள் தங்களது விசாரணையை நாளை தொடங்குகின்றனர். திருச்சூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்காக காரணங்கள் குறித்து விசாரணை நடத்த உள்ளனர். இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×