search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parliament election"

    • நாட்டின் பாதுகாப்பிற்காக நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் திரும்பப் பெற விரும்புகிறார்கள்.
    • திரிணாமுல் காங்கிரசும், காங்கிரசும் மாநிலத்தில் மோதலில் இருப்பது போல் பாசாங்கு செய்கின்றன.

    கொல்கத்தா:

    பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காள மாநிலம் வடக்கு மால்டாலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    இந்தியாவின் வளர்ச்சிக்கு மேற்கு வங்காளம் ஒரு காலத்தில் உந்துதலாக இருந்தது. சமூக சீர்திருத்தங்கள், அறிவியல், தத்துவ, ஆன்மிக முன்னேற்றங்கள் மற்றும் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தாலும் கூட முக்கிய பங்காற்றியது. ஆனால் முதலில் இடதுசாரிகளும் பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், மாநிலத்தின் பெருமையையும், மரியாதையையும் குலைத்து, வளர்ச்சியைக் கூட தடுத்தது.

    திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கு வங்காளத்தில் பல ஆயிரம் கோடி ஊழல் மட்டுமே நிலவுகிறது. மத்திய அரசு வழங்கிய நிதி திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களால் கொள்ளையடிக்கப்பட்டன. அந்த கட்சி செய்த ஊழல்களுக்கு மக்கள் விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.

    பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தன. அதே நிலைதான் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் அவர்களுக்கு காத்திருக்கிறது.

    நாட்டின் பாதுகாப்பிற்காக நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் திரும்பப் பெற விரும்புகிறார்கள். இந்திய கூட்டணி 370-வது பிரிவை ரத்து செய்ய விரும்புகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் சொல்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தின் பல பயனாளிகளில் தலித்துகளும் அடங்குவர். இந்திய கூட்டணி உங்களது சொத்துக்களை கொள்ளையடிக்க பார்க்கிறது.

    ஏழை மக்களின் சொத்துக்கள் அனைத்தையும் விசாரிக்கப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து எக்ஸ்ரே மிஷின் கொண்டு வந்து, நாட்டில் உள்ள அனைவருக்கும் எக்ஸ்ரே எடுப்பார்கள், நகை, சொத்து உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் கைப்பற்றி, அதில் ஒரு பகுதியை தங்கள் வாக்கு வங்கிக்கு கொடுக்க நினைக்கின்றனர். ஆனால் அதற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசாமல் திரிணாமுல் காங்கிரஸ் அமைதி காத்து ஆதரவளிக்கிறது.

    வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு உங்களது நிலங்களை கொடுத்து அவர்களை இங்கு திரிணாமுல் காங்கிரஸ் குடியமர்த்துகிறது. இந்த வாக்கு வங்கிக்கு உங்கள் சொத்துக்களை கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. நீங்கள் உயிருடன் இருக்கும்போதும், இறந்த பிறகும் கூட காங்கிரஸ் உங்களை கொள்ளையடிக்கும்.

    திரிணாமுல் காங்கிரசும், காங்கிரசும் மாநிலத்தில் மோதலில் இருப்பது போல் பாசாங்கு செய்கின்றன. ஆனால் உண்மையில் இந்த இரு கட்சிகளின் குணமும் சித்தாந்தமும் ஒன்றுதான். திருப்திப்படுத்துவது அந்த கட்சிகள் இடையே பொதுவான விஷயம்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
    • இடைத்தேர்தல் நடைபெறும் ராஜஸ்தானில் பாகிடோரா தொகுதியில் 31% வாக்குகள் பதிவாகி உள்ளது.

    மேற்கு வங்காளம்:

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில் 2-ம் கட்ட தேர்தலில் 11 மணி நிலவரப்படி அசாம் 27.43%, பீகார் 21.68%, சத்தீஸ்கர் - 35.47%, ஜம்மு-காஷ்மீர் - 26.61%, கர்நாடகா - 22.34%, கேரளா - 25.61%, மத்தியபிரதேசம் - 28.51%, மகாராஷ்டிரா - 18.83%, மணிப்பூர் - 33.22%, ராஜஸ்தான் - 26.84%, திரிபுரா - 36.42%, உ.பி.யில் 24.31%, மேற்கு வங்காளம் - 31.25% வாக்குகள் பதிவாகி உள்ளது.

    இடைத்தேர்தல் நடைபெறும் ராஜஸ்தானில் பாகிடோரா தொகுதியில் 31% வாக்குகள் பதிவாகி உள்ளது.

    • முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.
    • மக்கள் ஆர்வத்துடன் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    இன்று 2-ம் கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

    கேரளாவில் 20 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் பலரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நடிகை பார்வதி திருவோத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

    வெறுப்புக்கு எதிராகவும் வெறுப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராகவும் மதத்தை ஆயுதமாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகவும் வாக்களியுங்கள் என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.





     


    • வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
    • திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது வாக்கினை செலுத்தினார்.

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் சுமார் 65.5 சதவீத வாக்குகள் பதிவானது.

    இந்த நிலையில் 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்தது. 2-ம் கட்டமாக 13 மாநிலங்கள்-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 89 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. மத்திய பிரதேச மாநிலம் பைதூல் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் திடீரென மரணம் அடைந்ததால் அந்த தொகுதி தேர்தல் 3-ம் கட்ட ஓட்டுப்பதிவின் போது நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதனால் இன்று (வெள்ளிக்கிழமை) 88 தொகுதிகளில் 2-ம் கட்ட தேர்தல் நடந்து வருகிறது. இதில் கேரளாவில் மொத்தம் 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கும் இன்று காலை முதல் ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது.

    இதுதவிர ராஜஸ்தானில் 13, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசத்தில் தலா 8, மத்திய பிரதேசத்தில் 6, அசாம், பீகாரில் தலா 5, சத்தீஸ்கர், மேற்குவங்காளத்தில் தலா 3, மணிப்பூர், திரிபுரா, காஷ்மீரில் தலா ஒரு தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

    88 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. 88 தொகுதிகளிலும் 1,202 வேட்பாளர்கள் களம் இறங்கி உள்ளனர்.

    வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். அவர்களின் விவரம் பின்வருமாறு:-

    * திருவனந்தபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி வாக்களித்தார்.

    * திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது வாக்கினை செலுத்தினார்.

    * திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான டொவினோ தாமஸ் திருச்சூர் இரிங்கலக்குடாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    * திருவனந்தபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இஸ்ரோ தலைவர் சோமநாத் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

     * கேரள பாஜக தலைவர் கே. சுரேந்திரன் கோழிக்கோட்டில் வாக்களித்தார்.

    * கர்நாடக முதல்வர் சித்தராமையா சாமராஜநகர் சித்தராமனா ஹண்டி கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

    * கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா வாக்களித்தார்.

    * கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ராகுல் டிராவிட் வாக்களித்தார்.

    * கர்நாடக முன்னாள் முதல்வரும், மாண்டியா மக்களவைத் தொகுதியின் ஜேடிஎஸ் வேட்பாளருமான குமாரசாமி தனது மகன் நிகில் குமாரசாமியுடன் ராமநகராவில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

    * முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே மனைவியுடன் சென்று ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.


    * ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் ஓம் பிர்லா கோட்டாவின் சக்தி நகர் பகுதியில் உள்ள பள்ளியில் வாக்களித்தார்.

    * மத்தியப் பிரதேச துணை முதல்வர் ராஜேந்திர சுக்லா ரேவாவில் வாக்களித்தார்.

    • காங்கிரஸ் எம்.பி.யும், திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளருமான சசி தரூர் தனது வாக்கை பதிவு செய்தார்.
    • தொகுதியின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை நல்லிணக்கத்தை கண்டதால் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

    கேரளா:

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    கேரள மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி.யும், திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளருமான சசி தரூர் தனது வாக்கை பதிவு செய்தார். இதைதொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் இந்தியாவின் பன்மைத்துவத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க இங்கே வந்துள்ளேன்.

    தொகுதியின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை நல்லிணக்கத்தை கண்டதால் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன். மூன்று தேர்தல்களிலும் மக்கள் எனக்கு அளித்த அதே உற்சாகத்தையும், ஆதரவையும், நல்லெண்ணத்தையும் எனக்கு அளித்துள்ளனர். நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.


    • வாக்களிக்க முடியாத பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கோவை பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 21 லட்சத்து 6 ஆயிரத்து 124 வாக்காளர்கள் இருக்கின்றனர்.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால் பல வாக்காளர்களால் வாக்களிக்க முடியவில்லை. இவ்வாறு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவரும், வேட்பாளருமான அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார்.

    இதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார்பாடி விளக்கம் அளித்து இருந்தார். ஆனால் அந்த விளக்கம் ஏற்கும்படியாக இல்லை என பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் வாக்காளர்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி கோவையில் நேற்று வாக்களிக்க முடியாத பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார் பாடி, பொது மக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் 2-வது முறையாக செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 2023 அக்டோபர் 27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது. கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 5 தொகுதிகளில் (பல்லடம் தவிர்த்து) 16 லட்சத்து 71 ஆயிரத்து 3 வாக்காளர்கள் இருந்தனர். இதில் புதிதாக 47 ஆயிரத்து 559 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். 6,181 இறப்பு, 18 ஆயிரத்து 934 நிரந்தர குடிபெயர்வு, 3,249 இரட்டை பதிவு காரணமாக மொத்தம் 28 ஆயிரத்து 364 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

    இந்த விவரங்களை சரிபார்த்து கருத்து தெரிவிக்க கட்சியினருக்கு நகல் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான மார்ச் 27-ந் தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை (ஜனவரி 22-ந் தேதி முதல் மார்ச் 17-ந் தேதி) வரை மீண்டும் திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டு படிவங்கள் பெறப்பட்டன.

    மார்ச் 27-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி பட்டியலில் கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூலூர், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், கோவை வடக்கு மற்றும் தெற்கு ஆகிய சட்டசபை தொகுதிகளில் 17 லட்சத்து 8 ஆயிரத்து 369 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 26 ஆயிரத்து 504 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். இப்போது 1090 இறப்பு, 6998 நிரந்த குடிபெயர்வு, 245 இரட்டை பதிவு என 8,333 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

    திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லடம் சட்டசபை தொகுதிக்கான வாக்காளர்கள் 3 லட்சத்து 97 ஆயிரத்து 755 சேர்த்து கோவை பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 21 லட்சத்து 6 ஆயிரத்து 124 வாக்காளர்கள் இருக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

    கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அங்கப்பாபள்ளியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக கலெக்டர் கிராந்திகுமார் பாடி கூறுகையில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். வீடு- வீடாகச் சென்று ஆய்வு செய்து பெயரை நீக்கியதாக ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்கள் கூறி உள்ளனர். நீக்கப்பட்டதாக கூறப்படும் பட்டியலில் உள்ள 40-45 வாக்காளர்கள் ஓட்டளிக்க வந்ததாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார். எதன் அடிப்படையில் பெயர்கள் நீக்கப்பட்டன என அறிக்கை கேட்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
    • அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    கேரளா:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 19, 26 மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1-ந் தேதிகளில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி கடந்த 19-ந்தேதி முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

    2-ம் கட்டத் தேர்தலுக்கு கடந்த 4-ந்தேதி மனுத்தாக்கல் தொடங்கியது. 8-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் 2-ம் கட்டத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    * கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    * பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சுரேஷ் கோபி திருச்சூரில் வாக்களித்தார்.

    * காங்கிரஸ் வேட்பாளர் கே.சி.வேணுகோபால் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

    * திருவனந்தபுரத்தில் உள்ள வாக்குச் சாவடியில் பத்தனம்திட்டா பாஜக வேட்பாளர் அனில் ஆண்டனி தனது வாக்கினை செலுத்தினார்.

    * கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள பிஇஎஸ் வாக்குச்சாவடியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்களித்தார்.

    * பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் பிரகாஷ் ராஜ் வாக்களித்தார்.




    • மகாராஷ்டிரா மாநிலத்தில் 2-ம் கட்டமாக 8 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
    • திருமண விழா முக்கியமானது தான் ஆனால் வாக்களிப்பதும் முக்கியம்.

    மகாராஷ்டிரா:

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    அந்தவகையில் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்கிறது.

    2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 2-ம் கட்டமாக 8 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் மகாராஷ்டிராவில் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க திருமண கோலத்தில் மணமகன் ஆகாஷ், அமராவதியின் வதர்புரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் கூறியபோது,

    திருமண விழா முக்கியமானது தான் ஆனால் வாக்களிப்பதும் முக்கியம். இன்று மதியம் 2 மணிக்கு திருமணம் நடைபெற உள்ளது என்று கூறினார். 


    • கர்நாடகா மாநிலத்தில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
    • முதல்முறையாக வாக்களிப்பவர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.

    பெங்களூரு:

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    அந்தவகையில் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்கிறது.

    2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    கர்நாடகா மாநிலத்தில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இந்நிலையில் பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து தனது வாக்கை நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:

    பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பது முக்கியமான விஷயம். நீங்கள் தேர்ந்தெடுக்கப்போகிறவர்தான் உங்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள்.

    ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும் உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய்விடும்.

    முதல்முறையாக வாக்களிப்பவர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். இது ஒரு அற்புதமான அனுபவம். சந்தோஷம், எழுச்சியை கொடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
    • வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன.

    புதுடெல்லி:

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.

    அந்தவகையில் கேரளா (20 தொகுதிகள்), கர்நாடகா (14), ராஜஸ்தான் (13), மகாராஷ்டிரா (8), உத்தரபிரதேசம் (8), மத்திய பிரதேசம் (6), அசாம் (5), பீகார் (5), சத்தீஸ்கர் (3), மேற்கு வங்காளம் (3), மணிப்பூர் (1), திரிபுரா (1), காஷ்மீர் (1) போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்கிறது.

    2-ம் கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மத்திய பிரதேசத்தின் பீட்டுல் தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் மரணமடைந்ததால், அந்த தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

    எனவே மீதமுள்ள 88 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதிகளில் நேற்று முன்தினம் மாலையிலேயே பிரசாரம் ஓய்ந்தது.

    இந்நிலையில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன.

    2-ம் கட்ட தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15.88 கோடியாகும். இவர்கள் வாக்களிப்பதற்காக 1.67 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.


    • சங்கன் விடுதியில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாக புகார்
    • புகார் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் விசாரணை

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கன் விடுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

    மக்கள் அளித்த புகார் தொடர்பாக கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் விசாரணை நடத்தினார். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    இதே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டிருந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஆனால், இதுவரையிலும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்தவர்கள் யார் என்பதைக் கண்டறிய முடியவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தனர். 

    • 742 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானதாகவும், 1,161 வாக்குச்சாவடிகள் பிரச்சனைக்குரியவையாகவும் கண்டறியப்பட்டு இருக்கிறது.
    • கேரள மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 49ஆயிரத்து 159 பேர் ஆவர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 194 பேர் போட்டியிடுகின்றனர்.

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடது சாரி ஜனநாயக முன்னணி, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் முடிந்ததில் இருந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் கேரள மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று மத்திய மந்திரி அமித்ஷா, பிரியங்கா காந்தி ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். பல இடங்களில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் கட்சியினருக்கிடையே மோதலும் நடந்தது.

    இந்நிலையில் 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நாளை (26-ந்தேதி) நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஓட்டுப்பதிவை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

    வாக்காளர்கள் ஓட்டு போடுவற்காக 25,231 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    742 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானதாகவும், 1,161 வாக்குச்சாவடிகள் பிரச்சனைக்குரியவையாகவும் கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த 1,903 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. அங்கு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    காசர்கோடு, கண்ணூர், வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, பாலக்காடு, திருச்சூர், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் அனைத்து வாக்குச்சாவடிகளும் ஓட்டுப்பதிவு நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் 75 சதவீத வாக்குச்சாவடிகள் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது.

    கேரள மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 49ஆயிரத்து 159 பேர் ஆவர். அவர்களில் ஆண் வாக்காளர்கள் 1 கோடியே 34லட்சத்து 15ஆயிரத்து 293 பேர், பெண் வாக்காளர்கள் 1 கோடியே 43 லட்சத்து 33ஆயிரத்து 499 பேர், மூன்றாம் பாலினத்தினர் 367 பேர்.

    மக்களவை தேர்தலை முன்னிட்டு கேரளாவில் திருவனந்தபுரம், திருச்சூர், காசர்கோடு, கோழிக்கோடு, பத்தினம்திட்டா ஆகிய 5 மாவட்டங்களில் 144 தடையை அமல்படுத்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். திருவனந்தபுரம், திருச்சூர், காசர்கோடு, கோழிக்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் 144 தடை நேற்று(24-ந்தேதி) நேற்று மாலை 6 மணிக்கே அமலுக்கு வந்தது.

    அந்த மாவட்டங்களில் வருகிற 27-ந்தேதி வரை தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பத்தினம்திட்டா மாவட்டத்தில் இன்று மாலை 6 மணிமுதல் 144 தடை உத்தரவு அமலாக இருக்கிறது.

    இந்த மாவட்டங்களில் 5 பேருக்கு மேல் கூடுதல், பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துதல் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    ×