தமிழ்நாடு

மவுனம் காக்கும் அ.தி.மு.க. தொண்டர்களால் சசிகலா கலக்கம்

Published On 2024-05-06 08:44 GMT   |   Update On 2024-05-06 08:44 GMT
  • எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய 3 அணிகளிலுமே சசிகலாவின் வேண்டுகோளுக்கு உற்சாகம் காட்டவில்லை.
  • தொண்டர்கள் மனநிலையை புரிந்து கொள்ள முடியாமலும் அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுக்க தயங்கியபடியும் சசிகலா உள்ளார்.

சென்னை:

அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பேன் என்று தொடர்ந்து கூறி வரும் சசிகலா சமீபத்தில் தொண்டர்களின் நாடித்துடிப்பை பார்க்க புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தினார்.

அ.தி.மு.க., அ.ம.மு.க., ஓ.பி.எஸ். அணிகளுக்குள் தனக்கு இருக்கும் ஆதரவை தெரிந்து கொள்ளவும், தனது ஆதரவாளர்களை தெரிந்து கொள்ளவும் ஒரு படிவம் மூலம் தூண்டில் வீசினார்.

அந்த படிவத்தில் 15 கேள்விகள் கேட்டு இருந்தார். பெயர், முகவரி, கட்சியில் வகிக்கும் பதவி, 2017-ல் வகித்த பதவி உள்ளிட்ட கேள்விகள் இடம் பெற்று இருந்தன.

படிவம் வெளி வந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தொண்டர்கள் மத்தியில் எந்த சலனமும் இல்லை. மவுனமாகவே இருக்கிறார்கள். சசிகலா எதிர்பார்த்த அளவு படிவங்களை பூர்த்தி செய்து யாரும் அனுப்பவில்லை.

எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய 3 அணிகளிலுமே சசிகலாவின் வேண்டுகோளுக்கு உற்சாகம் காட்டவில்லை.

இது சசிகலாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தொண்டர்கள் மனநிலையை புரிந்து கொள்ள முடியாமலும் அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுக்க தயங்கியபடியும் சசிகலா உள்ளார்.

தேர்தல் முடிவு தெரிந்ததும் எல்லாவற்றுக்கும் விடை கிடைக்கும். நம்பிக்கையுடன் இருங்கள் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருவதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News