செய்திகள்

இந்திய ராணுவம் மீது தாக்குதல்: பாகிஸ்தான் படையினர் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

Published On 2017-05-26 10:54 GMT   |   Update On 2017-05-26 10:54 GMT
ஜம்மு-காஷ்மீரின் உரி பகுதியில் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் எல்லைப் படையைச் சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லையை ஒட்டிய உரி பகுதியில் இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு அதிரடி படையினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்திய ராணுவத்தின் ரோந்து வாகனத்தின் மீது இந்த தாக்குதல் முயற்சி நடைபெற்றது.

இந்திய ராணுவத்தின் துரிதமான எதிர் தாக்குதலால் பாகிஸ்தான் படையின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் எதிர் தாக்குதலில் பாகிஸ்தான் படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர்.

போலீசாரின் தகவலின் படி, கொல்லப்பட்ட இரண்டு பாகிஸ்தான் வீரர்களின் சடலங்கள் சர்வதேச எல்லை பகுதியில் கிடப்பதாக தெரிகிறது.

முன்னதாக பாகிஸ்தான் நிலைகள் மீது இந்திய ராணுவத்தினர் கடந்த செவ்வாய்க்கிழமை திடீர் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து பாகிஸ்தானின் அதிரடி படையினர் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News