search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய ராணுவம்"

    • மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் முதல் கட்டமாக வெளியேறும் நடவடிக்கை தொடங்கியது.
    • மே 10-ம் தேதிக்குள் ராணுவ வீரர்கள் முழுமையாக வெளியேறி விடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

    மாலே:

    மாலத்தீவில் அதிபர் முகமது முய்சு தலைமையில் மக்கள் தேசிய காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.

    இவர் ஆட்சியை பிடிப்பதற்கு முன்னரே மாலத்தீவில் நம் நாட்டு ராணுவ வீரர்கள் முகாம் அமைத்துள்ளனர். அதிபராக பதவியேற்றவுடன் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டார்.

    கடந்த மாதம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் பேசிய முகமது முய்சு, மாலத்தீவு விவகாரங்களில் தலையிடவோ, அதன் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ எந்த நாட்டையும் இனி அனுமதிக்க முடியாது. 3 விமான தளங்களில் ஒரு விமான தளத்தில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் மார்ச் 10-ம் தேதிக்குள் வெளியேற்றப்படுவர். மற்ற 2 விமான தளங்களில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் மே 10-ம் தேதிக்குள் வெளியேறிவிடுவார்கள். இதற்கான ஒப்பந்தம் இந்தியா-மாலத்தீவு இடையே மேற்கொள்ளப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

    இதற்கிடையே, ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 10-ம் தேதி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களின் ஒரு பகுதியினர் அந்நாட்டை விட்டு படிப்படியாக வெளியேறத் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியானது. மே 10-ம் தேதிக்குள் இந்திய ராணுவம் முழுமையாக வெளியேற உள்ளது.

    • மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களுக்குப் பதிலாக திறமையான தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.
    • மாற்று ஹெலிகாப்டர் இந்திய போர்க்கப்பலில் இருந்து நாளை வரவுள்ளதாகவும் மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மாலே:

    மாலத்தீவில் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்ட முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி னார்.

    மாலத்தீவில் இந்திய ராணுவ வீரர்கள் 70-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மேலும் கடலோர ரோந்து பணிகளை மேற்கொள்ள டோர்னியர் ஹெலிகாப்டர் மற்றும் மருத்துவ வசதிக்காக துருவ் ஹெலிகாப்டர் ஆகியவற்றை மாலத்தீவுக்கு இந்தியா வழங்கி உள்ளது.

    ராணுவம் வெளியேறுவது தொடர்பாக இரு நாடுகள் பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களுக்குப் பதிலாக திறமையான தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. மார்ச் 10-ந் தேதிக்குள் ஒரு விமானப்படைத் தளத்தில் இருக்கும் ராணுவ வீரர்களுக்குப் பதிலாக தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும்,மே 10-ந் தேதிக்குள் மற்ற இரண்டு விமானப் படைத் தளங்களில் உள்ள ராணுவ வீரர்களும் திரும்பப் பெறப்பட்டு, தொழில்நுட்ப பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்திய படைகளுக்கு பதிலாகவும், மருத்துவ நோக்கங்களுக்காக இந்தியா வழங்கிய ஹெலிகாப்டர்களை கையாளவும் முதல் இந்திய தொழில்நுட்ப பணியாளர்கள் மாலத்தீவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது சீனு கானில் நிறுத்தப்பட்டுள்ள இந்தியப் படைகளுக்குப் பதிலாக ஹெலிகாப்டரை இயக்கும் குழுவினர் மாலத்தீவு வந்தடைந்துள்ளனர் என்று கூறியுள்ளது. மேலும் இதற்கிடையில், லாமுகன் கத்தூ விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஹெலிகாப்டர் பராமரிப்புக்காக இந்தியாவுக்கு அனுப்பப்படும் என்றும், மாற்று ஹெலிகாப்டர் இந்திய போர்க்கப்பலில் இருந்து நாளை வரவுள்ளதாகவும் மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே கான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்த இந்திய ராணுவ வீரர்கள் இன்று அதிகாலை தொழில்நுட்ப பணியாளர்கள் குழுவிடம் தங்களது பணியை ஒப்படைக்கும் நடைமுறையை தொடங்கினர்.

    • 15ம் தேதி உபேந்திர விவேதி பொறுப்பேற்க உள்ளார்.
    • வடக்கு பிராந்திய ராணுவ தலைமை பொறுப்பில் உள்ளார்.

    இந்திய ராணுவ துணைத் தளபதியாக உபேந்திர விவேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    வரும் 15ம் தேதி உபேந்திர விவேதி துணைத் தளபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

    தற்போது வடக்கு பிராந்திய ராணுவ தலைமை பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாலத்தீவின் புதிய அதிபர் முகமது முய்வு சீனாவுக்கு ஆதரவான போக்கை கடைபிடித்து வருகிறார்.
    • ராணுவம் தொடர்பான இந்தியா உடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க மாலத்தீவு மறுத்து விட்டது.

    மாலத்தீவில் உள்ள விமானப்படை தளங்களை இந்திய ராணுவம் பயன்படுத்தி வந்தது. மனிதாபிமான அடிப்படையிலான உதவி, மருத்துவ பொருட்கள் தொடர்பான உதவி ஆகியவற்றிற்காக பயன்படுத்தி வந்தது.

    புதிதாக பதவி ஏற்ற மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேற்றப்படும் எனத் தெரிவித்தார். இது தொடர்பான இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக இருதரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மார்ச் 10-ந்தேதி மூன்று தளங்களில் ஒன்றில் இருந்து இந்திய ராணுவம் வெளியேறும். மே 10-ந்தேதி மேலும் இரண்டு தளங்கள் என முற்றிலுமாக இந்திய ராணுவம் வெளியேறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று மாலத்தீவு பாராளுமன்றம் கூடியது. அப்போது பாராளுமன்றத்தில் பேசிய மகமது முய்சு "எந்தவொரு நாடும் எங்களது நாட்டின் இறையாண்மையில் தலையிடுவது அல்லது குறைந்து மதிப்பிடுவதற்கு அனுமதிக்கமாட்டோம். இந்திய ராணுவம் வெளியேறும்" என்றார்.

    87 இடங்களை கொண்டிருக்கும் இரண்டு முக்கிய எதிர்க்கட்சிகளான எதிர்க்கட்சிகளான எம்.டி.பி. (43), ஜனநாயக கட்சி (13) எம்.பி.க்கள் முகமது முய்சுவின் பேச்சை புறக்கணித்தனர். நிர்வாகப் பதவியை பெறுவதற்கான ஏழு எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 80 எம்.பி.க்களை கொண்ட பாராளுமன்றத்தில் 24 எம்.பி.க்கள் முன்னிலையில்தான் முகமது முய்சு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.
    • மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவப்படை மார்ச் 15-ந்தேதிக்குள் வெளியேற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

    மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். சீன ஆதரவாளரான அவர், மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவப்படை மார்ச் 15-ந்தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இதுதொடர்பாக இருநாடுகள் இடையே சில நாட்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடந்தது. நேற்று டெல்லியில் 2-வது கட்டமாக உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடந்தது.

    இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் பரஸ்பரமாக செயல்பட்டு தீர்வு காண ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறும்போது, கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அடையாளம் காணுதல், நடப்பு வளர்ச்சி ஒத்துழைப்பு திட்டங்களை விரைவுபடுத்துதல் உள்பட இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான பரந்த அளவிலான பிரச்சனைகள் குறித்து இருதரப்பும் விவாதங்கள் தொடர்ந்தன.

    மாலத்தீவில் உள்ள மூன்று விமான தளங்களில் ஒன்றில் ராணுவ வீரர்களை மார்ச் 10-ந்தேதிக்குள் இந்திய அரசு திரும்பப்பெறும். மற்ற இரண்டு தளங்களில் உள்ள ராணுவ வீரர்களை மே 10-ந்தேதிக்குள் திரும்பப்பெறும். இதை இரு தரப்பும் ஒப்புக்கொண்டன என்று தெரிவித்தது. மேலும் உயர்மட்ட குழுவின் அடுத்த கூட்டத்தை மாலத்தீவு தலைநகர் மாலேயில் நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டது.

    • மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
    • சீன-மாலத்தீவு உறவுகள் எதிர்காலத்தில் மேலும் வலுவடையும் என்று நம்பிக்கை உள்ளது.

    மாலே:

    மாலத்தீவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.

    சீன ஆதரவாளரான அவர், மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் சீன பயணத்தில் அந்நாட்டுடன் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். பின்னர் நாடு திரும்பிய முகமது முய்சு, இந்தியாவை மறைமுகமாக விமர்சித்தார்.அவருக்கு மாலத்தீவின் முக்கிய இரண்டு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியாவுடனான மோதல் போக்கு நல்லதல்ல என அறிவுறுத்தின. இந்த நிலையில் இந்தியாவை மீண்டும் சீண்டும் விதமாக முகமது முய்சு பேசி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மாலத்தீவின் இறையாண்மையை சீனா மதிக்கிறது. இரு நாடுகளும் ஒருவரையொருவர் மதிக்கின்றன. சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம் முன்முயற்சியானது. இது இருதரப்பு உறவுகளை புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. மாலத்தீவின் உள்விவகாரங்களில் தலையிடும் நாடு சீனா அல்ல, இதனால்தான் இரு நாடுகளுக்கும் இடையே வலுவான உறவு உள்ளது. சீன-மாலத்தீவு உறவுகள் எதிர்காலத்தில் மேலும் வலுவடையும் என்று நம்பிக்கை உள்ளது. சீன அதிபர் ஜின்பிங் குடிமக்களின் நலனை முதன்மைப்படுத்தி வருகிறார். அவரது தலைமையின் கீழ் சீனாவின் பொருளாதாரம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மாலத்தீவின் இலக்குகளை அடைய சீன அரசு உதவும் என்று ஜின்பிங் என்னிடம் உறுதியளித்துள்ளார். மாலத்தீவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப முன்னேற்றத்தை கொண்டு வருவதும் எனது இலக்கு. வளர்ந்த நாடுகளுடன் இணக்கமாக செயல்படும் நாடாக மாலத்தீவை மாற்ற விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகிலேயே உயரமான் போர் பகுதியாக் சியாச்சின் கருதப்படுகிறது
    • 15,200 அடி உயரத்தில் மருத்துவ பணியில் நியமிக்கப்பட்டதை இந்திய ராணுவம் தெரிவித்தது

    இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கோட்டிற்கு அருகே உள்ளது மிக அதிக உயரமுடைய செங்குத்தான பனிமலைகளை உள்ளடக்கிய சியாச்சின் பனிமலைப்பகுதி.

    இந்தியாவிலேயே மிக பெரியதும், உலகின் இரண்டாவது மிக பெரிய பனிமலைப்பகுதியான இங்கு இந்திய ராணுவத்தில் சிறப்பான பயிற்சி பெற்ற வீரர்கள் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உலகிலேயே உயரமான போர் பகுதியாகவும் இது கருதப்படுகிறது.

    இப்பகுதியில் முதல் பெண் மருத்துவ அதிகாரியாக "சியாச்சின் போராளிகள்" (Siachen Warriors) குழுவை சேர்ந்த கேப்டன் ஃபாத்திமா வாசிம் நியமிக்கப்பட்டார்.

    "கடுங்குளிருடன் மிக கடினமான வானிலையில் பணியாற்ற தேவையான தீவிர பயிற்சிகளை சியாச்சின் போர்  பயிற்சி பள்ளியில் (Siachen Battle School) கேப்டன் ஃபாத்திமா வாசிம் வெற்றிகரமாக நிறைவு செய்ததையடுத்து 15,200 அடி உயரத்தில் பணிக்காக நியமிக்கப்பட்டார். அவரது மனந்தளராத முயற்சிக்கும் ஊக்கத்திற்கும் இது சரியான எடுத்துக்காட்டு" என இந்திய ராணுவத்தின் ஃபைர் அண்ட் ஃப்யூரி கோர் (Fire and Fury Corps) தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளது.

    கடல் எல்லைக்கு மேல் 12,000 அடி உயரத்தில் பர்தாபூர் எனும் இடத்தில் உள்ளது சியாச்சின் அடிப்படை முகாம் (Siachen Base Camp). சாதாரண தினங்களில் மைனஸ் 86 டிகிரி சென்டிகிரேடு (- 86 degree centigrade) என குளிர்நிலை நிலவி வரும் இங்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் பனிப்புயல்கள் தாக்குவது வழக்கமான ஒன்று.

    இங்குள்ள சியாச்சின் போர் பள்ளியில்தான் கடுமையான பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறார் கேப்டன் ஃபாத்திமா வாசிம்.

    • மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கையக படுத்துதல் கவுன்சில் கூட்டம் வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ளது.
    • உள்நாட்டு உற்பத்தி மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் இந்திய ராணுவத்திற்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படுகின்றன.

    புதுடெல்லி:

    சீனா மற்றும் பாகிஸ்தானுடனான எல்லை பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்திய ராணுவத்தில் பாதுகாப்பு திட்டங்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    உள்நாட்டு உற்பத்தி மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் இந்திய ராணுவத்திற்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படுகின்றன.

    இந்நிலையில் விமானம் தாங்கி கப்பல் உள்ளிட்ட ரூ.1.4 லட்சம் கோடி மதிப்பிலான 3 மெகா பாதுகாப்பு திட்டங்களுக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கையக படுத்துதல் கவுன்சில் கூட்டம் வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் விமானம் தாங்கி போர் கப்பல், 97 தேஜஸ் ரக விமானங்கள் வாங்குவது மற்றும் 156 இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கும் திட்டம் ஆகிய 3 மெகா திட்டங்களுக்கு பூர்வாங்க ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தபடுவதற்கு சில ஆண்டுகள் ஆகும். எனினும் ராணுவத்தை வலுப்படுத்த இந்த திட்டங்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு இந்திய விமான படைக்கு 83 தேஜஸ் எம்.கே.1 ஏ. ஜெட் விமானங்கள் வாங்குவதற்காக இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்திருந்தது.

    இந்நிலையில் தற்போது 97 தேஜஸ் மார்க் 1 ஏ போர் விமானங்கள் சுமார் ரூ.55 ஆயிரம் கோடி செலவில் வாங்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்திய விமானப்படை வாங்கும் உள்நாட்டிலயே உருவாக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 180 ஆக உயரும்.

    இதேபோல 3-வது விமானம் தாங்கி கப்பல் மற்றும் 156 இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் ஆகிய திட்டங்களும் பாதுகாப்பு துறையில் முக்கிய திட்டங்களாக கருதப்படுகிறது.

    • வழிசெலுத்தல் எனும் தொழில்நுட்பம் மூலம் இந்த விமானங்களை இயக்குவது சிறப்பு அம்சமாகும்.
    • மலை பகுதிகள் மற்றும் வெப்பம் அதிகமாக உள்ள பொக்ரானில் இந்த ஆளில்லா விமானிகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

    தாம்பரம்:

    சென்னை குரோம் பேட்டையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக் கழகத்தின் எம்.ஐ.டி. மேம்பட்ட வான்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இயங்கும் முனைவர் கலாம் மேம்பட்ட ஆளில்லா விமான ஆராய்ச்சி மையம் உருவாக்கிய தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட டிரோன் எனப்படும் 500 ஆளில்லா விமானங்களை இந்திய ராணுவம் பயன்படுத்த தொடங்கியது.

    நாட்டின் வட கிழக்கு மாநிலங்களின் எல்லை பகுதிகள் மற்றும் மலை பகுதிகளில் எளிதாக அணுக முடியாத இடங்களில் இந்த டிரோன்களை இந்திய ராணுவம் பயன்படுத்துகிறது.

    கடந்த வாரம் மத்திய மந்திரி அமித்ஷா, உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகரமான டேராடூனில் இந்தோ திபெத் எல்லை காவல் படையின் 62-ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, இந்த டிரோன் வடிவமைத்த குழுவை பாராட்டினார். மேலும் அவர் பேசும் போது எல்லை கண்காணிப்பு நிலையங்களில் மருந்துகள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை அனுப்ப உதவும் என்று கூறினார்.

    இந்த ஆளில்லா விமானங்கள் கடும் பனி, மழை மற்றும் வேகமான காற்று வீசும் போது கூட பயன்படுத்த முடியும். 1 கிலோமீட்டர் உயரம் வரை சென்று பறக்கக்கூடிய இந்த டிரோன்கள், ஒரு சுற்றில் சுமார் 20 கிலோமீட்டர் வரை இயக்க முடியும். புவியிடங்காட்டி எனப்படும் ஜி.பி.எஸ். பயன்படுத்திய இந்த குழு, வழிசெலுத்தல் எனும் தொழில்நுட்பம் மூலம் இந்த விமானங்களை இயக்குவது சிறப்பு அம்சமாகும்.

    இந்த ஆளில்லா விமானங்களின் எடை சுமார் 100 கிலோ ஆகும், மற்றும் இவை 15 முதல் 20 கிலோ மருந்துகள், உணவு பொருட்கள், எண்ணெய் போன்ற பொருட்களை ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு எடுத்து செல்லும் திறன் கொண்டவையாகும்.

    அருகாமையில் இருக்கும் சென்சார் மூலம் சுலபமாக தரைக்கு திரும்ப இந்த விமானங்களை இயக்க முடியும். தரையில் திரும்பி வந்த உடன் சில நிமிடங்களிலேயே ஆர்மிங் சுவிட்ஸ் எனும் கருவி தயார் நிலைக்கு வந்த உடன், இந்த ஆளில்லா விமானத்தை மறுபடியும் இயக்க வைக்க முடியும். உயர்ந்த மலை பகுதிகள், அடர்ந்த காடுகள், வட கிழக்கு மாநிலங்களில் உள்ள மலை பகுதிகள் மற்றும் வெப்பம் அதிகமாக உள்ள பொக்ரானில் இந்த ஆளில்லா விமானிகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

    இந்த ஆளில்லா விமானங்கள் அவசர அறுவை சிகிச்சைக்காகவும், உடல் உறுப்புகள் மற்றும் அறிய வகை ரத்தம் மற்றும் குருதித்திரவவிழையம் விரைவாக எடுத்து செல்லவும் இந்த மையம் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.

    • கடந்த 2015-ம் ஆண்டில் இந்திய விமான படைக்காக 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
    • அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் ஜூன் மாதத்துக்குள் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.

    அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் அமெரிக்க ராணுவத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் ஆதரவு நாடுகளான இங்கிலாந்து, இஸ்ரேல் உள்பட 18 நாடுகள் ராணுவத்தில் இந்த வகை ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன.

    கடந்த 2015-ம் ஆண்டில் இந்திய விமான படைக்காக 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவை தற்போது விமான படையில் சேவையாற்றி வருகின்றன. இதைத் தொடர்ந்து இந்திய ராணுவத்துக்காக ரூ.5,691 கோடியில் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை வாங்க 2020-ம் ஆண்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    அதன்படி அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் மெசா பகுதியில் உள்ள போயிங் ஆலையில் இந்திய ராணுவத்துக்காக அப்பாச்சி ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் ஜூன் மாதத்துக்குள் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.

    • ஜம்மு-காஷ்மீரில் இரண்டு நாட்களாக துப்பாக்கிச் சண்டை
    • ரஜோரி, அனந்த்நாக் சண்டையில் வீரர்கள், போலீசார் வீரமரணம்

    ஜம்மு- காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பாதுகாப்புப்படை வீரர்கள் உள்ளூர் போலீசார் உடன் இணைந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனந்த்நாக் மாவட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் இரண்டு உயர் அதிகாரிகள் உள்பட 3 பேர் வீரமரணம் அடைந்தனர்.

    இதுதொடர்பாக பா.ஜனதா தேசிய செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் கூறுகையில் ''நம்முடைய வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீணாகாது. தக்க பதிலடி கொடுக்கப்படும். இந்த சம்பவங்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்துடன் ஒட்டுமொத்த நாடும் இருக்கிறது. இந்த சம்பவங்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை மன்னிக்கமாட்டோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

    நேற்று வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில், பிரதமர் மோடிக்கு பா.ஜனதாவின் தலைமை கழகத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பா.ஜனதா தலைவர்கள் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மூத்த சகோதரரான அந்தோணி சாமி 40 ஆண்டுகள் இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
    • செவிலியர் பிரிவில் முதன்மை இடமான மேஜர் ஜெனரல் பதவி உயர்வை பெற்றுள்ளார்.

    நாகர்கோவில்:

    இந்திய ராணுவ செவிலியர் சேவையில் தமிழகத்தில் இருந்து முதல் பெண் மேஜர் ஜெனரலாக இக்னேசியஸ் டெலோஸ் புளோரா பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பதவி உயர்வு பெற்றுள்ள இக்னேசியஸ் டெலோஸ் புளோராவின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாவூர் வடக்கூர் ஆகும். இவருடைய தந்தை லூர்துசாமி பிள்ளை, தாய் தெரசம்மாள். இவர் கடந்த 5-1-1965-ம் ஆண்டு பிறந்தார்.

    இவருக்கு 3 சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகள் உண்டு. மூத்த சகோதரரான அந்தோணி சாமி 40 ஆண்டுகள் இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2-வது சகோதரரான ஜாண் பிரிட்டோ எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 3-வது சகோதரர் ஜார்ஜ் ராஜாவும் ராணுவத்தில் பணியாற்றியவர். ஆனால் இவர் தற்போது உயிரோடு இல்லை. அன்னம்மாள், டெசி ஆகிய 2 சகோதரிகள் உள்ளனர்.

    இக்னேசியஸ் டெலோஸ் புளோரா பள்ளி படிப்பை முடித்தவுடன் மூத்த சகோதரரான அந்தோணி சாமியின் அறிவுரைப்படி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்திய ராணுவ செவிலியர் சேவை பிரிவு பணிக்கான எழுத்து தேர்வை எழுதி அதில் தேர்வானார். பின்னர் அடுத்தடுத்து தேர்வுகள் எழுதி பதவி உயர்வு பெற்று வந்தார். இந்த நிலையில் செவிலியர் பிரிவில் முதன்மை இடமான மேஜர் ஜெனரல் பதவி உயர்வை பெற்றுள்ளார். இதனை அவரது குடும்பத்தினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    இதுபற்றி இக்னேசியஸ் டெலோஸ் புளோராவின் சகோதரர்கள் அந்தோணி சாமி, ஜான் பிரிட்டோ ஆகியோர் கூறியதாவது:-

    இந்திய நாட்டிற்காக நாங்கள் பணியாற்றியதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அதிலும் எங்களது சகோதரி இக்னேசியஸ் டெலோஸ் புளோரா தமிழகத்தின் முதல் பெண் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றிருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் சேவை செய்யும் பாக்கியம் எங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு கிடைத்தது மிகவும் சந்தோசமாகவும், மன நிறைவாகவும் உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இக்னேசியஸ் டெலோஸ் புளோராவின் கணவர் இக்னேசியஸ் ஜான். இவர் ஓய்வு பெற்ற பேராசிரியர். இவர்களுக்கு மைக்கேல் ஜெகன், ஜெசன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×