என் மலர்
நீங்கள் தேடியது "பாகிஸ்தான் பயங்கரவாதிகள்"
- பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மீண்டும் இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
- பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தானில் லஷ்கர்-இ-ெதாய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய 2 பயங்கரவாத இயக்கங்களும் ஆட்சியாளர்கள் உதவியுடன் செயல்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் ராணுவமும் இந்த பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்கள் கொடுத்து பயிற்சியும் கொடுத்து வருகிறது.
பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளை இந்தியாவில் ஊடுருவ செய்து நாச வேலை செய்ய பாகிஸ்தான் ராணுவம் சதி திட்டமும் வகுத்து கொடுக்கிறது. சமீபத்தில் பஹல்காமில் நடந்த தாக்குதலும், அப்படித்தான் நடந்தது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன.
இவ்வளவு அடிபட்டும் திருந்தாத பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மீண்டும் இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அவர்களை பாகிஸ்தான் உளவு அமைப்பு தற்போது காஷ்மீர் எல்லை அருகே கொண்டுவந்து நிறுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
அந்த வகையில் 120 பயங்கரவாதிகள் காஷ்மீர் எல்லையில் பதுங்கியிருப்பதை இந்திய ராணுவம் உறுதிபடுத்தி உள்ளது. அவர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி வந்தால் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
- இவர்கள் ஹர்விந்தர் ரிண்டா மற்றும் கோல்டி ப்ரார் ஆகியோரின் செயல்பாட்டாளர்கள்
- இலக்கு வைத்து கொலைகளை செய்ய இவர்கள் திட்டமிட்டுள்ளனர்
இந்தியாவின் 77வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகளின் தாக்குதலோ, நாசவேலைகளோ நடைபெறாமல் இருக்க ராணுவமும், அனைத்து மாநில காவல்துறையினரும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.
தேச எல்லைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 5 பேரை அம்மாநில காவல்துறை கைது செய்திருக்கிறது.
"மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து பஞ்சாப் காவல்துறை இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளது. பயங்கரவாதிகளாக கருதப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹர்விந்தர் ரிண்டா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த கோல்டி ப்ரார் ஆகியோரின் செயல்பாட்டாளர்களாக இந்த 5 பேரும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மாநிலம் முழுவதும் இலக்கு வைத்து கொலைகளை செய்ய திட்டமிட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு வெளிநாட்டு கைத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளோம்" என இந்த நடவடிக்கை குறித்து பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குநர் கௌரவ் யாதவ் தெரிவித்தார்.
சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நேற்று பஞ்சாபின் டர்ன் டரன் பகுதியில் தீவிரவாத குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.






