செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் மரத்தில் கணவரை கட்டிப்போட்டு மனைவியை கற்பழித்த கும்பல்

Published On 2017-05-24 10:33 GMT   |   Update On 2017-05-24 10:33 GMT
உத்தரப்பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் கணவரை கட்டிப்போட்டு மனைவியை கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலம் பதான் மாவட்டம் ‌ஷகஸ் வான் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் கணவன்-மனைவி அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றனர்.

மாலையில் இருவரும் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்கள் தம்பதியை வழிமறித்தனர். இதை சற்றும் எதிர்பாராத கணவர் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் இருவரும் சேர்ந்து கணவரை தாக்கி மரத்தில் கட்டிப்போட்டனர். பின்னர் இருவரும் அந்தப் பெண்ணை கற்பழித்து தப்பி ஓடிவிட்டார்கள்.

அதன்பிறகு இருவரும் தட்டுத்தடுமாறி அருகில் உள்ள போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தனர்.

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஷெயோராஜ் சிங் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகிறார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News