செய்திகள்

கண்ணிவெடி தாக்குதலில் ஏட்டு பலி

Published On 2016-12-07 02:16 GMT   |   Update On 2016-12-07 02:16 GMT
சத்தீஷ்காரில் கண்ணிவெடி தாக்குதலில் ஏட்டு பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராய்ப்பூர்:

சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த அரண்பூர் காட்டுப்பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும், மாவட்ட போலீசாரும் நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கோண்டபரா மற்றும் கொண்டாஸ் சாலையில் போலீசார் சென்றபோது, மறைந்து இருந்த மாவோயிஸ்டுகள் சாலையில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியை வெடிக்கச் செய்தனர். மேலும் துப்பாக்கியாலும் சுட்டனர். இதில் 2 போலீஸ் ஏட்டுகள் படுகாயம் அடைந்தனர். உடனே இருவரையும் விமானம் மூலமாக ராய்ப்பூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலன் இன்றி கமல் சிங் என்ற ஏட்டு இறந்தார். தொடர்ந்து மாவோயிஸ்டுகளை தேடும் பணி நடந்து வருகிறது. 

Similar News