உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் தொழிலாளி தற்கொலை

Published On 2022-07-19 09:01 GMT   |   Update On 2022-07-19 09:01 GMT
  • கருத்து வேறுபாடு காரணமாக ராமரின் மனைவி தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிகிறது.
  • தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி தாளமுத்துநகரை சேர்ந்தவர் ராமர் (வயது38). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக ராமருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமாகவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ராமரின் மனைவி தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராமர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவ இடத்திற்கு சென்ற தாளமுத்துநகர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News