உள்ளூர் செய்திகள்

கோவையில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-07-02 09:53 GMT   |   Update On 2022-07-02 09:53 GMT
  • கடந்த 5 வருடத்துக்கு முன்பு சங்கவி (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
  • சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

கோவை:

கோவை கிணத்துக்கடவு சேரன் நகரை சேர்ந்தவர் அரவிந்த் பிரான்சிஸ் (வயது 27). கூலி தொழிலாளி.

இவர் கடந்த 5 வருடத்துக்கு முன்பு சங்கவி (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் அரவிந்த் பிரான்சிசுக்கு குடிப்பழக்கம் உள்ளது.

இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் அரவிந்த் பிரான்சிஸ் தனது மனைவின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார்.

சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் இருந்து எலி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து சென்னை ராஜிவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News