உள்ளூர் செய்திகள்

திருச்சியில் ரம்ஜான் சிறப்பு தொழுகைகள்

Published On 2023-04-22 10:23 GMT   |   Update On 2023-04-22 10:23 GMT
  • ஒருவரை ஒருவர் ஆர தழுவி அன்பை பரிமாறிக்கொண்டனர்
  • பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

திருச்சி, 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக ஈகைத்திருநாள் எனும் நோன்பு பெருநாள் தொழுகை இன்று தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும், குழந்தைகளும் முதியவர்களும் கலந்து கொண்டு தங்களின் பெருநாள் தொழுகையை நபிகள் நாயகம் காட்டிய வழியில் நிறைவேற்றினர். சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மற்றும் அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

Tags:    

Similar News