உள்ளூர் செய்திகள்

கரும்பு விவசாயிகளுக்கு முன்பணம் ரூ.252.29 கோடி- தமிழக அரசு அனுமதி

Published On 2022-08-15 03:22 GMT   |   Update On 2022-08-15 03:22 GMT
  • கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நியாயமான மற்றும் ஆதாய விலையை வழங்க வழிவகை செய்து முன்பணமாக ரூ.252.29 கோடி ஒப்பளித்து ஆணை வெளியிட்டுள்ளது.
  • அதிகாரபூர்வ உத்தரவை வேளாண்மை உற்பத்தி கமிஷனர் சமய மூர்த்தி பிறப்பித்து உள்ளார்.

சென்னை:

தமிழக அரசு வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் சர்க்கரை ஆலைகள் 2021-2022-ம் ஆண்டு அரவைப் பருவத்தில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நியாயமான மற்றும் ஆதாய விலையை வழங்க வழிவகை செய்து முன்பணமாக ரூ.252.29 கோடி ஒப்பளித்து ஆணை வெளியிட்டுள்ளது.

இதற்கான அதிகாரபூர்வ உத்தரவு வேளாண்மை உற்பத்தி கமிஷனர் சமய மூர்த்தி பிறப்பித்து உள்ளார்.

Tags:    

Similar News