உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பல்லடத்தில் வாலிபர் தற்கொலை

Published On 2023-05-15 05:57 GMT   |   Update On 2023-05-15 05:57 GMT
  • மரத்தில் தூக்கு போட்ட நிலையில் ஒருவர் பிணமாக தொங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள சிங்கனூர் அரசு மதுபானக்கடை எதிரே உள்ள தோட்டப்பகுதியில், மரத்தில் தூக்கு போட்ட நிலையில் ஒருவர் பிணமாக தொங்குவதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் இறந்தவர் ஜெயகணேஷ்(37)என்பது தெரியவந்துள்ளது. அவர் எதற்காக தற்கொலை செய்தார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News