உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

தாராபுரத்தில் இன்று பரபரப்பு ஒரே நாளில் 3 இடங்களில் கொள்ளை முயற்சி - தடுக்க முயன்ற பெண்ணை கத்தியால் குத்திய திருடன்

Published On 2022-09-08 04:54 GMT   |   Update On 2022-09-08 04:54 GMT
  • வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி ஆகியவற்றை திருடி சென்றனர்.
  • பொதுமக்கள் சத்தம் போடவே கொள்ளையன் அங்கிருந்து ஓடி விட்டான் .

தாராபுரம் :

தாராபுரம் எல்லிஸ் நகர் டி.எஸ். எம். நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 67), பால் வியாபாரி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகன் கார்த்திக். இன்று காலை விஜயன் பால் வியாபாரம் செய்ய வீட்டிலிருந்து சென்று விட்டார். விஜயலட்சுமி உழவர் சந்தைக்கும் கார்த்திகேயன் வாக்கிங் சென்று விட்டனர்.

இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து அரை பவுன் கம்மல் மற்றும் 60 கிராம் மதிப்புள்ள வெள்ளி பிரேஸ்லெட் ஆகியவற்றை திருடி சென்றனர். மேலும் அதே பகுதி பத்மாவதி நகரில் நிதி நிறுவனம் நடத்தி வரும் நாச்சிமுத்து என்பவரது வீட்டில் கிரில் கேட்டை உடைத்து திருட முயற்சி செய்து உள்ளனர். பொதுமக்கள் சத்தம் போடவே கொள்ளையன் அங்கிருந்து ஓடி விட்டான் .

தாராபுரம் ஆர் .கே .ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் . இவரது மனைவி தேவிகா . இவர்களது வீட்டில் கதவை உடைக்கும் முயன்ற போது தேவிகா கையை வைத்து தடுத்துள்ளார். ஆத்திரமடைந்த கொள்ளையன் கதவை உடைக்காமல் அவரது கையை கத்தியால் கீறி விட்டு தப்பி ஓடி விட்டான். தாராபுரத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் நடந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

Tags:    

Similar News