உள்ளூர் செய்திகள்
பல்லடம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
- கணவன் - மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு.
- பல்லடம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி கவிதா(வயது 30) .இவர்களுக்கு 10 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தகராறு முடிந்து இருவரும் தூங்கச் சென்று விட்டனர். நேற்று காலை ஈஸ்வரன் எழுந்து பார்த்தபோது வீட்டின் கூரையில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் கவிதா தொங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து கவிதாவின் தந்தை பாலன் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.