உள்ளூர் செய்திகள்

ரத்ததான முகாம் நடைபெற்ற காட்சி. 

திருப்பூரில் ரத்ததான முகாம்

Published On 2022-09-17 08:01 GMT   |   Update On 2022-09-17 08:01 GMT
  • ஸ்ரீ ஜெயின் ஸ்வேதாம்பர் தெராபந்த் ஜெயின் பவனில் நடைபெற்றது.
  • பொதுமக்கள் ஆர்வமுடன் ரத்ததானம் வழங்கினர்.

திருப்பூர் :

ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி மற்றும் அகில பாரதிய தெராபந்த் யுவக் பரிஷத் சார்பில் ரத்ததான முகாம் திருப்பூர் சூசையாபுரத்தில் உள்ள ஸ்ரீ ஜெயின் ஸ்வேதாம்பர் தெராபந்த் ஜெயின் பவனில் நடைபெற்றது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். இங்கு சேகரிக்கப்படும் ரத்தம் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஆதார் மருத்துவமனை ரத்த வங்கி, ரேவதி மருத்துவமனை ரத்த வங்கி உள்ளிட்ட இடங்களுக்கு கொடுக்கப்படுகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் ரத்ததானம் வழங்கினர்.நிகழ்ச்சியில் தலைவர் சுமித் பண்டாரி, செயலாளர் அங்கித் போத்ரா, கன்வீனர் ஹேமந்த் ஜெயின், துணை கன்வீனர் அமன் ஜெயின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

Tags:    

Similar News