உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி மளிகை கடையில் பணம்-பொருட்கள் திருட்டு

Published On 2022-07-18 09:06 GMT   |   Update On 2022-07-18 09:06 GMT
  • கடையில் இருந்த ரூ. 30 ஆயிரம் பணம் மற்றும் மளிகை பொருட்கள் திருட்டு போயிருந்தது.
  • தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள புதிய முனியசாமிபுரத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது28).

இவர் அப்பகுதி மெயின்ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இன்று அதிகாலை வழக்கம் போல் கடையை திறக்க சரண்ராஜ் சென்றார்.

அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த ரூ. 30 ஆயிரம் பணம் மற்றும் மளிகை பொருட்கள் திருட்டு போயிருந்தது.

போலீசார் விசாரணை

இது தொடர்பாக அவர் தாளமுத்துநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News