உள்ளூர் செய்திகள்

மோடி மீதான எதிர்ப்பை மூடி மறைக்க முடியாது- கே.எஸ்.அழகிரி

Published On 2022-07-28 07:17 GMT   |   Update On 2022-07-28 07:17 GMT
  • மாநகர பேருந்து நிறுத்த நிழற்குடையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரம் ஒட்டப்பட்டிருந்தது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.
  • விளம்பரத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை பா.ஜ.க.வினர் சிலர் ஒட்டியிருக்கின்றனர்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் அருகேயுள்ள மாநகர பேருந்து நிறுத்த நிழற்குடையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரம் ஒட்டப்பட்டிருந்தது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த விளம்பரத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை பா.ஜ.க.வினர் சிலர் ஒட்டியிருக்கின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த சில அமைப்பினர் கருப்பு வர்ணத்தை கொண்டு மோடி படத்தை அழித்துள்ளனர். இந்த செயலை செய்ததற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். மோடியின் படத்தின் மீது கருப்பு மை பூசியதற்காக 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் மோடி மீதான எதிர்ப்பை மூடி மறைக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News