உள்ளூர் செய்திகள்

வன்னியர் சங்க 43-வது ஆண்டு தொடக்க நாள்: பாட்டாளி சொந்தங்களுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

Published On 2022-07-20 10:15 GMT   |   Update On 2022-07-20 10:15 GMT
  • சமூகநீதியை வென்றெடுப்பது மட்டுமே நமது இலக்கல்ல....
  • அனைவருக்கும் அவரவருக்கு உரிய சமூக நீதியை வழங்கும் நிலைக்கு உயர்வது தான் நமது இலட்சியம்.

சென்னை:

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

மிக மிக பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள வன்னிய மக்களின் சமூகநீதியையும், உரிமைகளையும் வென்றெடுப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட வன்னியர் சங்கத்தின் 43-ஆவது ஆண்டு தொடக்க நாள் இன்று. சங்கத்தை நிறுவிய மருத்துவர் அய்யாவுக்கும், அவர் வழி நடக்கும் சொந்தங்களுக்கும் வாழ்த்துகள்.

சமூகநீதியை வென்றெடுப்பது மட்டுமே நமது இலக்கல்ல.... அனைவருக்கும் அவரவருக்கு உரிய சமூக நீதியை வழங்கும் நிலைக்கு உயர்வது தான் நமது இலட்சியம். அந்த இலக்கை எட்டுவதற்காக இன்று முதல் உழைக்க இந்த நாளில் பாட்டாளிகள் உறுதியேற்றுக் கொள்வோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News