உள்ளூர் செய்திகள்

புளியங்குடியில் சிறுமி கர்ப்பம்- கணவர் மீது போக்சோ வழக்கு

Published On 2022-08-18 04:47 GMT   |   Update On 2022-08-18 04:47 GMT
  • 5 மாத கர்ப்பிணியாக உள்ள சிறுமி, புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார்.
  • சிறுமியின் விபரங்களை பதிவு செய்தபோது அவருக்கு 18 வயது நிரம்பும் முன்னரே திருமணம் நடந்தது தெரியவந்தது.

புளியங்குடி:

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் அய்யன்குமார்(வயது 29).

இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ள அந்த சிறுமி, புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார்.

அப்போது அவரது விபரங்களை பதிவு செய்தபோது சிறுமிக்கு 18 வயது நிரம்பும் முன்னரே திருமணம் நடந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வாசுதேவநல்லூர் யூனியனை சேர்ந்த ஊர்நல அலுவலர் முத்தாத்தாள் புளியங்குடி போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் 2 பேரின் பெற்றோர் சம்மதத்துடன் சிறுமிக்கு திருமணம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து அய்யன்குமார் மற்றும் அவரது பெற்றோர் மீதும், சிறுமியின் பெற்றோர் மீதும் போலீசார் குழந்தை திருமணம், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News