உள்ளூர் செய்திகள்

ராமேசுவரம் பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள்

உறுதிமொழி ஏற்ற போது எடுத்த படம்.

தூய்மை நகரத்துக்கான மக்கள் இயக்கம் தொடக்கம்

Published On 2022-07-08 09:13 GMT   |   Update On 2022-07-08 09:13 GMT
  • தூய்மை நகரத்துக்கான மக்கள் இயக்கத்தில் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.
  • இதில் பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், நகராட்சி பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ராமேசுவரம்

ராமேசுவரம் ராமநா தசாமி கோவில் நிர்வாகத்தின் கீழ் ராமேசுவரத்தில் இயங்கி வரும் பர்வதவர்த்தினி அம்மன் மேல்நிலைப்பள்ளியில், தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது. பள்ளி மாணவிகள் மத்தியில் 'என் குப்பை என் பொறுப்பு' என்ற பெயரில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது தொடர்பாக மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து ராமேசுவரம் நகராட்சியில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் நகராட்சி சார்பில் தூய்மை நகரத்திற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவர்கள் எனது நகரத்தை தூய்மையாக வைத்திருப்பது எனது கடமை, தூய்மை பணிகளுக்கு நேரத்தை ஒதுக்குவேன், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளரிடம் ஒப்படை க்கும்படி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படு த்துவேன். பிளா ஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்பேன் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

பள்ளிகளில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் பேச்சு ப்போட்டி, ஓவி யப்போட்டி, கட்டுரை ப்போட்டிகள் நடை பெற்றது. இதில் பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், நகராட்சி பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News