மானிய விலையில் வேளாண் எந்திரம் பெற விவசாயிகளுக்கு வாய்ப்பு
- மானிய விலையில் வேளாண் எந்திரம் பெற விவசாயிகளுக்கு வாய்ப்பு உள்ளது.
- மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தும் வகையில் மதிப்புக்கூட்டும் எந்திரங்கள் மானிய விலையில் விற்கப்படுகின்றன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகள் விளை வித்த பொருள்களை சந்தைப்படுத்தும் காலம் வரை ஏற்படும் இழப்புகளை குறைத்து சேமிப்புக்கால அளவை அதிகரித்து மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தும் வகையில் மதிப்புக்கூட்டும் எந்திரங்கள் மானிய விலையில் விற்கப்படு கின்றன.
எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு, தேங்காய் மட்டை உரிக்கும் எந்திரம், சிறிய பருப்பு உடைக்கும் எந்திரம், சிறிய வகை நெல் அரைவை எந்திரம், தானியம் அரைக்கும் இயந்திரம், நிலக்கடலை தோள் உரித்து வகை பிரிக்கும் எந்திரம், கேழ்வரகு சுத்தப்படுத்தி கல் நீக்கும் எந்திரம், மாவரைக்கும் எந்திரம், தீவனம் அரைக்கும் எந்திரம் ஆகியவை 40 சதவிகித மானியம் அல்லது அரசு நிா்ணயித்த உச்சவரம்புத் தொகையில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படுகிறது.
மேலும் தகவல்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் பிரிவு மற்றும் பரமக்குடியில் உள்ள வேளாண்மைப்பிரிவு உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு தகவல் பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.