உள்ளூர் செய்திகள்

கோவில் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் பரிசுகள் வழங்கல்

Published On 2023-08-17 09:18 GMT   |   Update On 2023-08-17 09:18 GMT
  • கோலாட்டம் அடிக்கும் சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது.
  • நிகழ்ச்சியில் வக்கீல் பாரதி, நகர்மன்ற உறுப்பினர் ஜோஸ்மின் லூர்துமேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி வேலாயுத புரம் நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்ரகாளி அம்மன், காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கோலாட்டம் அடிக்கும் சிறுமிகளுக்கு பரிசுகளும், 1008 பெண்களுக்கும் மங்கள பொருட்களும் வழங்கப் பட்டது.

நிகழ்ச்சிக்கு அப்பகுதியில் நகர்மன்ற உறுப்பினர் லவராஜா தலைமை தாங்கினார். பரிசுப் பொருட்கள் மற்றும் 1008 மங்கள பொருட்களை தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற துணைத்தலைவரும், நகர்மன்ற உறுப்பினரும் பொறியாளருமான தவமணி வழங்கினார்.

இதில் வக்கீல் பாரதி, நகர்மன்ற உறுப்பினர் ஜோஸ்மின் லூர்துமேரி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சி ஏற்பாடு களை கோவில்பட்டி வேலாயுதபுரம் தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணிமன்ற தலைவர் முருகன் செய்திருந்தார். நிகழ்ச்சியில் மன்ற நிர்வாகி கள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News