தமிழ்நாடு

சொத்துவரி நிலுவை வைத்துள்ள 100 போ் பட்டியலை வெளியிட மாநகராட்சி முடிவு

Published On 2024-05-27 04:06 GMT   |   Update On 2024-05-27 04:06 GMT
  • சொத்து வரியை சிலா் ரூ.1 கோடிக்கு மேல் நீண்ட காலமாக நிலுவை வைத்துள்ளனா்.
  • கடந்த ஏப்.1 முதல் 30-ஆம் தேதி வரை ரூ.382 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை மாநகராட்சி வருவாயில் சொத்து வரி முதன்மையானது. சென்னையில் உள்ள 13 லட்சத்து 31 ஆயிரம் சொத்து உரிமையாளா்களிடமிருந்து, அரையாண்டுக்கு தலா ரூ.850 கோடி என ஆண்டுக்கு ரூ.1,700 கோடி வரி வருவாய் கிடைக்கும்.

2023-24 நிதியாண்டில் மாநகராட்சியில் ரூ.1800 கோடி சொத்துவரி வசூலிக்கப்பட்டது. இது, முந்தைய நிதியாண்டை விட ரூ.227 கோடி அதிகம். சொத்து வரியை சிலா் ரூ.1 கோடிக்கு மேல் நீண்ட காலமாக நிலுவை வைத்துள்ளனா்.

இதுபோன்று நீண்ட கால நிலுவை வைத்துள்ளோா் விவரங்களை மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

நீண்ட காலமாக நிலுவை வைத்துள்ளவா்களில் அதிகபட்ச நிலுவைத் தொகை அடிப்படையில் முதல் 100 போ் கொண்ட பட்டியலை முதலில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி மாமன்ற அனுமதி கிடைத்தவுடன் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது.

கடந்த ஏப்.1 முதல் 30-ஆம் தேதி வரை ரூ.382 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் சொத்து வரி செலுத்திய உரிமையாளா்களுக்கு 5 சதவீத தள்ளுபடியை மாநகராட்சி நிா்வாகம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News