உள்ளூர் செய்திகள்
- அம்மாசி கவுண்டன் காட்டுவளவு பகுதியில் மதுக்கடையை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
- 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு சமரச பேச்சு நடத்தினர்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த பண்ணப்பட்டி அம்மாசி கவுண்டன் காட்டுவளவு பகுதியில் மதுக்கடையை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் பா.ம.க. மாவட்ட தலைவர் டாக்டர் மாணிக்கம் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு சமரச பேச்சு நடத்தினர்.