உள்ளூர் செய்திகள்
தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். சார்பில் பதில் மனுதாக்கல்
- இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
- அதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வை ஏற்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:
அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட தீர்மானம் மற்றும் பொதுக்குழுவில் கட்சி விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்தது.
பொறுப்பாளர்கள் மாற்றம், விதிகளை திருத்தம் செய்தது குறித்து தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. மின்னஞ்சல் மூலம் தாக்கல் செய்து இருந்தது.
இந்நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழுவில் சட்ட விதிகள் மீறப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டி ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த பதில் மனுவில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வை ஏற்கக் கூடாது, ஒப்புதல் அளிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.